அண்ணாவின் இளமைக் காலம்
ஆற்காடு இராமசாமியின் அறிவுரை
காப்பி அடித்த பேச்சாளர்
கல்லூரி நண்பர் ஒருவர் அண்ணாவுடன் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக
வந்தார். மக்களை கவரும்படியாக எப்படிப் பேசுவது என்று அவர் கேட்டதற்கு,
அண்ணா எப்படிப் பேசுகிறாரோ, அப்படியே பேசிவிடுங்கள் என்று சிலர்
சொல்லிவைத்தார்கள்.முதன் நாளன்று அந்தக் கல்லூரி நண்பன்
அண்ணா பேசிய கூட்டத்துக் வந்திருந்ததர். அன்று கூட்டம் நடந்தபோது
நள்ளிரவு நேரம், எனவே மக்கள் சோர்ந்து அமர்ந்திருப்பதைப் பார்த்து,
உங்களுக்கு தொல்லை கொடுப்பதற்காக மன்னிக்கவேண்டும். நீங்கள்
அயர்ந்து தூங்கும் நேரத்தில் தொலைலை தருவதற்காக மன்னிக்க
வேண்டும்.... என்று கூறி அண்ணா பேச்சை தொடங்கினால். மக்கள்
புத்துணர்ச்சியுடன் உட்கார்ந்து பேச்சைக் கேட்கத் தொடங்கினார்கள்.
இதைக் கவனித்துவிட்டுச் சென்ற அந்த நண்பன் மறுநாளும் ஒரு கூட்டத்தில்
இதைக் கவனித்துவிட்டுச் சென்ற அந்த நண்பன் மறுநாளும் ஒரு கூட்டத்தில்
கலந்துகொண்டார். அப்போது மாலை 6 மணி. மக்கள் எல்லோரும்
சுறுசுறுப்பாக இருக்கும் நேரம். அந்த நண்பனிடம் பேசுகிறாயா? என்று
கேட்டவுடன் எழுந்து சென்று பேசத் தொடங்கினார். கூட்டத்தினரைப்
பார்த்து அவர் நீங்கள் எல்லோரும் தூக்கத்தில் எந்திருக்கிறீர்கள்.
உங்களுக்குத் தொல்லை கொடுப்பதற்காக மன்னிக்கவேண்டும் என்று
கூறினார். இதைக் கேட்டதும் கூட்டதினர் கை தட்டவில்லை. கொல்
என்று சிரித்தார்கள். அண்ணா பேசினால் மட்டும் கை தட்டுகிறார்களே
நான் பேசும்போது கேலியாக சிரிக்கிறார்களே என்று அன்றிரவு அந்த
நண்பர் வருத்தப்பட்டாராம்.
நேருவிடம் கொடுத்த துண்டு அறிக்கை!
நேருவிடம் கொடுத்த துண்டு அறிக்கை!
முன்பு ஒருமுறை அண்ணா கல்லூரி மாணவராக இருந்த சமயத்தில்,
சென்னைக்கு சுற்றுப் பயணம் வந்த நேரு அவர்கள் பிரபாத் டாக்கீசில்
ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசிப்கொண்டிருந்தார். திலகர் நிதி
பற்றி நாடு எங்கும் பரபரப்புடன் பேசப்பட்டு வந்தசமயம் அது. அதைப்பற்றி
அண்ணா அவர்கள் ஆங்கிலத்தில் இரு அறிக்கை தயார் செய்து அந்தக்
கூட்டத்தில் அண்ணா அவர்கள் நுழைந்து மேடை அருகே சென்று
நேருவின் கையிலே அந்தத் துண்டு அறிக்கையைக் கொடுத்துவிட்டு
வந்தார். திலகர் நிதி என்னும் பேரால் காங்கிரஸ்காரார்கள் செய்த
மோசடிப்பற்றி ஆங்கிலத்தில் அத்துண்டு அறிக்கை அச்சடிக்கப்பட்டிருந்தது.
ஒரு இளைஞன் இவ்வளவு துணிச்சலாக தன்னந்தனியாக நேருவின்
கையிலே இதைக் கொடுத்துவிட்டானே என்று
எல்லோரும் ஆத்திரப்பட்டனர்.
செங்கல்வராயன் முயற்சி தோற்றது!
ஆங்கிலத்திலும் அருந்தமிழிலும் போச்சாளராக விளங்ககும் காங்கிரஸ்
செங்கல்வராயன் முயற்சி தோற்றது!
ஆங்கிலத்திலும் அருந்தமிழிலும் போச்சாளராக விளங்ககும் காங்கிரஸ்
பிரமுகர் திரு.டி.செங்கல்வராயன் அவர்கள் கல்லூரியில் படித்துக்
கொண்டிருந்தபோது, நாடு சுதந்திரம் பெறவேண்டும் என்கிற தேசிய
எழுச்சி தீவிரமாக இருந்த நேரம். அப்போது கல்லூரியில் கடித்துக்
கொண்டிருந்த மாணவர்கள் பலர் ஒன்றுகூடி நாடு விடுதலை
பெறவேண்டும் என்று எண்ணி கல்லூரி மாணவர் மன்றம் ஒன்று
துவக்கி, அதில் மேடைப் பேச்சுக்களை பயின்றுவந்தார்கள். அப்போது
ஒரு தோழர் திரு.செங்கல்வராயன் அவர்களிடம் அண்ணா அவர்களின்
பேச்சாற்றல் பற்றி கூறினால். நன்றாகப் பேசக்கூடியவர். அவரை
நீங்கள் அவசியம் சந்திக்கவேண்டும் என்று வலியுறுதினார். நண்பர்
விருப்பப்படி அண்ணா அவர்களை சந்தித்தார். அநத் சந்திப்பின் மூலம்
பண்புள்ள இயல்பு, அன்புமிக்க நட்பு இவைகளை அண்ணாவிடம் கண்டார்.
திரு. செங்கல்வராயன் அண்ணாவைக் கண்டதும், அவரை தேச வேவையில் தன்னிடத்திலுள்ள இயக்கத்தில் ஈடுபடுத்த சேருமாறு பெருமுயற்சி செய்தார்.
அண்ணா அவர்களோ செங்கல்வராயன் விருப்பப்படி அந்தக்
கல்லூரி மாணவர் மன்றத்தில் சேர்ந்தார். ஆனால் அவர் சார்ந்துள்ள
கட்சியில் மட்டும் தன்னை சேர்த்துக்கொள்ளவில்லை. அரசியலில்
மாறுபட்ட கருத்துக்கள் ஆழமாக அமைந்துவிட்டன. திரு. செங்கல்வராயன்
தன் தலைவர் சத்தியமூர்திக்காக டெல்லி சட்டசபை தேர்தலில் கடுமையாக
உழைத்தார். அண்ணா நீதிக்கட்சியின் வேட்பாளர் ஆன உயர்திரு.
இராமசாமி முதலியார் பக்கம் நின்று ஆதரவு திரட்டினார். அதுமுதல்
இருவரும் அரசியலில் பிரிவுதான், என்றாலும் நட்பில் மட்டும் பிளவு
ஏற்படவில்லை.
தேர்தல் பிரச்சாரம்!
1936-ம் ஆண்டு சென்னை நகரசபைக்கு நடந்த உறுப்பினர் பதவிக்காக
தேர்தல் பிரச்சாரம்!
1936-ம் ஆண்டு சென்னை நகரசபைக்கு நடந்த உறுப்பினர் பதவிக்காக
அண்ணா அவர்கள போட்டியிட்டார்கள். பெத்துநாய்க்கன் பேட்டைப்
பகுதித் தொகுதிக்கு அவர் ஜஸ்டிஸ் கட்சியின் சாரிபில் நின்றார். அண்ணா
அவர்களை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தோழர் பாலசுப்பிரமணிய
முதலியார் என்பவர் நிறுத்தப்பட்டார்.
அண்ணாவைப் போலவே அவரும் எம்.ஏ. பட்டம் வெற்றவர்.
அண்ணாவைப் போலவே அவரும் எம்.ஏ. பட்டம் வெற்றவர்.
ஆனால் அவருக்கு கூட்டங்களில் பேச வராது. அண்ணா அவர்கள்
கூட்டங்களில் பேசும்போது, நானும் எம்.ஏ. வரை படித்தவன். என்னை
எதிர்த்து நிற்பவரும் எம்.ஏ. வரை படித்தவர். நாங்கள் இருவரும் செல்ல
விரும்பும் இடம் உங்கள் சார்பாகக் கருத்துக்களை எடுத்துச் சொல்ல
வேண்டிய நகரசபை. நான் உங்கள் முன் பேசுகிறேன். அவரையும்
பேசச் சொல்லி நீங்கள் கேளுங்கள். இருவரில் எவரை அனுப்பலாம்,
அனுப்பினால் பலன் ஏற்படும் என்பதைப் பிறகு தீர்மானித்துக்
கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவார்.
காங்கிராஸ் தேர்தல் கூட்டம் நடக்கும்போது பொது மக்கள் தேர்தலுக்கு
காங்கிராஸ் தேர்தல் கூட்டம் நடக்கும்போது பொது மக்கள் தேர்தலுக்கு
நிற்கும் தோழர பாலசுப்பிரமணிய முதலியாரை பேசும்படி
வற்புறுத்துவார்கள். காங்கிரஸ் தொண்டர்களும் அவரை கொங்ச
நேரம் பேசும்படி கெஞ்சுவார்கள். நான் தேர்தலில் வேண்டுமானாலும்
நிற்காமல் நின்றுவிடுகிறேன். ஆனால் பொதுக்கூட்டங்களில் பேசமட்டும்
மாட்டேன் என்று கூறிவிடுவார். அவருக்குப் பதிலாக பேசுகிறாம் என்று
தோழர்கள் டி.செங்கல்வராயன், கோபாலரத்தினம், சத்தியமூர்த்தி
ஆகியோர் முன்வந்து பேசுவார்கள்.
தம்மை எதிர்த்து நின்ற தோழர பாலசுப்ரமணிய முதலியாரைப்பற்றிப்
தம்மை எதிர்த்து நின்ற தோழர பாலசுப்ரமணிய முதலியாரைப்பற்றிப்
பேசும்போது அண்ணா அவர்கள், என்னுடைய நண்பர் பாலசுப்ரமணியம்
நெய்க்கு தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா? என்ற தத்துவத்
துறையைப் பற்றி படித்தவர், நான் நெய்யும், தொன்னையும் மக்களுக்கு
கிடைக்கச் செய்வது எப்படி என்று ஆராயும் பொருளாதார துயையைப்
பற்றிப் படித்தவன். இருவரில் யார் உங்களுக்குப் பயன்படுவோம்
என்பதை நீக்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிடுவார்.
நந்தவனமும் நாயும்
1936-ம் ஆண்டில் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் பெத்துநாய்க்கன்பேட்டையில் அண்ணாவை எதிர்த்து நின்ற காங்கிரஸ்காரருக்கு ஆதரவாக பலப்பல சொற்பொழிவாளர்கள்
வந்தார்கள். அவர்களில் ஒருவர் திரு.வி.கலியாணசுந்தரனார் ஆவார்
தேர்தல் கூட்டமொன்றில் திரு.வி.க. அவர்கள் சொற்பொழிவாற்றும்பொழுது நந்தவனத்தில் நாயொன்று செத்துக் கிடந்தால் மக்கள் நாயை அகற்றுவரோ! நந்தவனத்தை அழிப்பரோ! நாயையே அகற்றுவர். அதுபோல காங்கிரஸில் தீயவர் சிலர் இருந்தால், தீயவரை அகற்றுவது நன்றா? அல்லது அதற்காக காங்கிரஸையே அழிப்பது நன்றா? கூர்ந்து பார்மின்! தீயவரை அகற்றுவதன்றோ நல்லவரின் கடமை? நந்தவனத்தை தூய்மைப்படுத்தி காப்பற்றுவதால் காங்கிரஸையும் காப்பாற்றவேண்டும் என்பர் என்று கூறினார்.
அடுத்து நடைபெற்ற கூட்டத்தில் அண்ணா அவர்கள் பேசம்போது, திரு.வி.கலியாணசுந்தரனார் பேசும்போது நந்தவனத்தில் நாய் செத்துக் கிடந்தால் நாயை அகற்றுவதா? அல்லது நந்தவனத்தை அழிப்பதா? என்று கேட்கிறார். நல்லவர்கள் சுகம் பெறவும் நலிவடைந்தோர் குணம் பெறவுமே நந்தவனம் அமைந்திருக்கிறது. நல்ல மனிதர்கள் நுழையவேண்டிய நந்தவனத்தில் நாய் நுழையலாமா? நாய் நுழைந்தால் பின் அது நந்தவனமாகுமா? நலிந்தவர்க்கும் நலம்பயக்கவேண்டிய நந்த வனம் நாயை சாகடிக்குமா? நாயும் சாகிறதென்றால் நந்தவனத்தில் மணம் வீசவில்லை, விஷக்காற்று வீசுகிறகென்றுதானே பொருள்படும். நாயையும் சாகடிக்கும் விஷக்காற்று வீசும் நந்தவனம் ஊரின் நடுவே இருக்கலாம்? அதனை அழித்து புதிதாக தோற்றுவிப்பதுதானே நல்லவர் செய்யும் கடமையாக இருக்க முடியும் என்று பதிலுரைத்தார்.
காங்கிரஸ்காரர்கள் வழக்கம்போல் அதற்குச் சமாதானம் கூற முன்வரமுடியாமல் வேறு முறைகளில் திரும்புவார்களாம்.
கோவிலுக்கு விளக்கா?
சென்னை மாநகராட்சி மன்ற தேர்தலில் அண்ணா போட்டியிட்டபோது பெத்துநாயக்கன்பேட்டை வட்டரத்தில் அப்பொழுது கோயில்களுக்கும், மெர்க்குரி விளக்குகள் போடப்பட்டு வந்தன. அந்த நேரத்தில் அண்ணாபுக்கு எதிராகக் காங்கிரஸ்காரர்கள் நோட்டீசு அடித்து வெளியிட்டார்கள். அப்பொழுது நடைபெற்ற ஜெயபாரதம் பத்திரிகையிலும் அண்ணாதுரைக்கு
தேர்தல் கூட்டமொன்றில் திரு.வி.க. அவர்கள் சொற்பொழிவாற்றும்பொழுது நந்தவனத்தில் நாயொன்று செத்துக் கிடந்தால் மக்கள் நாயை அகற்றுவரோ! நந்தவனத்தை அழிப்பரோ! நாயையே அகற்றுவர். அதுபோல காங்கிரஸில் தீயவர் சிலர் இருந்தால், தீயவரை அகற்றுவது நன்றா? அல்லது அதற்காக காங்கிரஸையே அழிப்பது நன்றா? கூர்ந்து பார்மின்! தீயவரை அகற்றுவதன்றோ நல்லவரின் கடமை? நந்தவனத்தை தூய்மைப்படுத்தி காப்பற்றுவதால் காங்கிரஸையும் காப்பாற்றவேண்டும் என்பர் என்று கூறினார்.
அடுத்து நடைபெற்ற கூட்டத்தில் அண்ணா அவர்கள் பேசம்போது, திரு.வி.கலியாணசுந்தரனார் பேசும்போது நந்தவனத்தில் நாய் செத்துக் கிடந்தால் நாயை அகற்றுவதா? அல்லது நந்தவனத்தை அழிப்பதா? என்று கேட்கிறார். நல்லவர்கள் சுகம் பெறவும் நலிவடைந்தோர் குணம் பெறவுமே நந்தவனம் அமைந்திருக்கிறது. நல்ல மனிதர்கள் நுழையவேண்டிய நந்தவனத்தில் நாய் நுழையலாமா? நாய் நுழைந்தால் பின் அது நந்தவனமாகுமா? நலிந்தவர்க்கும் நலம்பயக்கவேண்டிய நந்த வனம் நாயை சாகடிக்குமா? நாயும் சாகிறதென்றால் நந்தவனத்தில் மணம் வீசவில்லை, விஷக்காற்று வீசுகிறகென்றுதானே பொருள்படும். நாயையும் சாகடிக்கும் விஷக்காற்று வீசும் நந்தவனம் ஊரின் நடுவே இருக்கலாம்? அதனை அழித்து புதிதாக தோற்றுவிப்பதுதானே நல்லவர் செய்யும் கடமையாக இருக்க முடியும் என்று பதிலுரைத்தார்.
காங்கிரஸ்காரர்கள் வழக்கம்போல் அதற்குச் சமாதானம் கூற முன்வரமுடியாமல் வேறு முறைகளில் திரும்புவார்களாம்.
கோவிலுக்கு விளக்கா?
சென்னை மாநகராட்சி மன்ற தேர்தலில் அண்ணா போட்டியிட்டபோது பெத்துநாயக்கன்பேட்டை வட்டரத்தில் அப்பொழுது கோயில்களுக்கும், மெர்க்குரி விளக்குகள் போடப்பட்டு வந்தன. அந்த நேரத்தில் அண்ணாபுக்கு எதிராகக் காங்கிரஸ்காரர்கள் நோட்டீசு அடித்து வெளியிட்டார்கள். அப்பொழுது நடைபெற்ற ஜெயபாரதம் பத்திரிகையிலும் அண்ணாதுரைக்கு
ஓ ட்டுப் போட்டால் ஆலயங்களில் விளக்கு எரியாது என்று எழுதியிருந்தார்கள்.
அதற்கு அண்ணா பதிலளிக்கையிலே, இந்த நகரத்திலுள்ள சேரிகளெல்லாம் பன்னெடுங்காலமாக இருளில் மூழ்கி இருக்கின்றன. அந்த சேரிகளுக்கெல்லாம் விளக்கு போட்ட பிறகு, ஏழை எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கெல்லாம் விளக்குப்போட்ட பிறகு, பணமும், மின்சாரமும் மிச்சப்பட்டால் கோயிலுக்கு விளக்கு எரியும். சேரிப் பகுதிகளிலே இருட்டிலே மக்கள் வசிக்கிறார்கள். அங்கு நண்டு கடித்தாலும், நட்டுவாய்ககாலி கடித்தாலும் அந்தத் துன்பங்களையெல்லாம் மக்கள் அனுபவிக்கவேண்டியிருக்கிறது; அவர்களுக்கு விளக்கப் போடாமல் ஆண்டவனுக்கு விளக்குப் போட்டால் ஆண்டவன் முகம் கருக்குமேயொழிய ஒளி பெறாது என்று சொன்னார். அப்படியானால் உனக்கு ஓட்டு இல்லை என்றார்கள். அப்படிப்பட்ட ஓட்டு எனக்கு வேண்டாம் என்றார் அண்ணா. அதனால் தேர்தலில் தோற்றார்
என்.வி.நடராசனை சேரியில் சாப்பிடவைத்தார்!
சென்னையில் அண்ணா அவர்கள் நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது ஓட்டுக் கேட்பதற்காக சேரிக்கு சென்றிருந்தார்கள். அங்கே ஓட்டையும் கேட்டுவிட்டு அவர்கள். வீட்டிலேயும் சாப்பிட்டுவிட்டு வந்தார்கள். வரும்போது அவர்களைப் பார்த்து, இன்று நான் ஓட்டுக் கேட்க வந்தேன், உங்கள் வீட்டில் சாப்பிட்டேன். நாளை கங்கிரஸ்காரர்கள் வருவார்கள். அவர்களையும் நீங்கள் சாப்பிடச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு வந்தார். அதேபோல், மறுநாள் காங்கரிஸ்காராக்ள் போனார்கள். அப்போது தோழர் என்.வி.நடராசன் காங்கிரசில் இருந்தார்; அவரும் அவர்களுடன் போனார். அவர்கள் போய் ஓட்டு கேட்டதும், சாப்பிட வாருங்கள் என்று கையைப் பிடித்துக்கொண்டனர். என்ன செய்வார்கள்? சீனுவாச அய்யர் என்ற ஒரு காங்கரிஸ் பிரமுகர். அவரும், என்.வி.நடராசனும் முதல் தடவையாக சேரியில் சாப்பிட்டார்கள். காங்கிரஸ்காரார்களை சேரியில் முதல் தடவையாக சாப்பிட வைத்த பெருமை அண்ணா அவர்களையே சாரும்.
போக்கிரியை அடக்கினார்
சென்னை பெத்துநாய்க்கன்பேட்டையில் நகரசபை தேர்தலுக்கு அண்ணா போட்டியிட்டபோது காங்கிரஸ்காரர்கள் ஒரு போக்கிரிக்குக் கூலி கொடுத்து அண்ணாவின் கூட்டத்தைக் கலைக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்; அவன் வேலை எப்படியாவது கூட்டத்தைக் கலைக்கவேண்டுமென்பதுதான்.
அதற்கு அண்ணா பதிலளிக்கையிலே, இந்த நகரத்திலுள்ள சேரிகளெல்லாம் பன்னெடுங்காலமாக இருளில் மூழ்கி இருக்கின்றன. அந்த சேரிகளுக்கெல்லாம் விளக்கு போட்ட பிறகு, ஏழை எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கெல்லாம் விளக்குப்போட்ட பிறகு, பணமும், மின்சாரமும் மிச்சப்பட்டால் கோயிலுக்கு விளக்கு எரியும். சேரிப் பகுதிகளிலே இருட்டிலே மக்கள் வசிக்கிறார்கள். அங்கு நண்டு கடித்தாலும், நட்டுவாய்ககாலி கடித்தாலும் அந்தத் துன்பங்களையெல்லாம் மக்கள் அனுபவிக்கவேண்டியிருக்கிறது; அவர்களுக்கு விளக்கப் போடாமல் ஆண்டவனுக்கு விளக்குப் போட்டால் ஆண்டவன் முகம் கருக்குமேயொழிய ஒளி பெறாது என்று சொன்னார். அப்படியானால் உனக்கு ஓட்டு இல்லை என்றார்கள். அப்படிப்பட்ட ஓட்டு எனக்கு வேண்டாம் என்றார் அண்ணா. அதனால் தேர்தலில் தோற்றார்
என்.வி.நடராசனை சேரியில் சாப்பிடவைத்தார்!
சென்னையில் அண்ணா அவர்கள் நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது ஓட்டுக் கேட்பதற்காக சேரிக்கு சென்றிருந்தார்கள். அங்கே ஓட்டையும் கேட்டுவிட்டு அவர்கள். வீட்டிலேயும் சாப்பிட்டுவிட்டு வந்தார்கள். வரும்போது அவர்களைப் பார்த்து, இன்று நான் ஓட்டுக் கேட்க வந்தேன், உங்கள் வீட்டில் சாப்பிட்டேன். நாளை கங்கிரஸ்காரர்கள் வருவார்கள். அவர்களையும் நீங்கள் சாப்பிடச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு வந்தார். அதேபோல், மறுநாள் காங்கரிஸ்காராக்ள் போனார்கள். அப்போது தோழர் என்.வி.நடராசன் காங்கிரசில் இருந்தார்; அவரும் அவர்களுடன் போனார். அவர்கள் போய் ஓட்டு கேட்டதும், சாப்பிட வாருங்கள் என்று கையைப் பிடித்துக்கொண்டனர். என்ன செய்வார்கள்? சீனுவாச அய்யர் என்ற ஒரு காங்கரிஸ் பிரமுகர். அவரும், என்.வி.நடராசனும் முதல் தடவையாக சேரியில் சாப்பிட்டார்கள். காங்கிரஸ்காரார்களை சேரியில் முதல் தடவையாக சாப்பிட வைத்த பெருமை அண்ணா அவர்களையே சாரும்.
போக்கிரியை அடக்கினார்
சென்னை பெத்துநாய்க்கன்பேட்டையில் நகரசபை தேர்தலுக்கு அண்ணா போட்டியிட்டபோது காங்கிரஸ்காரர்கள் ஒரு போக்கிரிக்குக் கூலி கொடுத்து அண்ணாவின் கூட்டத்தைக் கலைக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்; அவன் வேலை எப்படியாவது கூட்டத்தைக் கலைக்கவேண்டுமென்பதுதான்.
அவ னும் அங்கு ஒரு ஓரமாக நின்றுகொண்டிருப்பான். அண்ணாவுக்குத் தெரியும். அவன் எதற்காக வந்திருக்கிறான் என்று. அப்பொழுதெல்லாம் ஒலி பெருக்கி இல்லாததால் எல்லோருக்கம் கேட்கவேண்டும் என்பதற்காக
எல்லாப் பக்கமும் திரும்பிப்பேசுவது வழக்கம். யார் யார் எப்படி இருக்கிறார்கள, என்னென்ன நோக்கத்தோடு வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்தபடி தோழர்களே! உங்களுடைய வலிவை கேவலம் எட்டணா, கத்தணாவுக்கா விற்கவேண்டும்? என்று கேலியாகப் பேசினார். அண்ணா அப்படிப் பேசியதும் அந்த போக்கிரி ஏதும் செய்யாத நிலையில் சும்மா இருந்து விடுவான். கூட்டத்தை அவன் கலைக்காமல் போனதும் அவர்கள் அவனைப்பார்த்து நீயும் அண்ணாத்துரை பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்துவிட்டாயா? என்பார்கள். என்ன செய்ய? அவன், ஏதாவது வம்பு பேசினால்தானே கலகம் செய்யலாம் என்பான். அப்படியானால் உனக்கு நாளையிலிருந்து கூலியில்லை என்பார்கள், உடனே அவன் கூலி தராவிட்டால் நாளை முதல் உங்கள் கூட்டத்தில் கலகம் செய்வேன் என்பான். ஆகவே தேர்தல் முடியும் வரை அவனுக்குக் கூலி கொடுத்துக்கொண்டு வந்தார்கள்.
1934 ம் ஆண்டு கோவைக்கு அருகில் உள்ள திருப்பூரில் செங்குந்த இளைஞர் மாநாட்டில் இரையாற்றிய அண்ணா அங்கு தந்தை பெரியாரை சந்தித்தார்.
கல்லூரி நாட்களில் அண்ணா எழுதிய முதல் தமிழ்க் கட்டுரை மகளிர் சமத்துவம் என்பது.அதேபோன்று ஆங்கிலத்தில் ஆடீளுஊடீறு ஆடீக்ஷ ஞஹசுஹனுநு எனும் கட்டுரை எழுதினார்.
1934-ல் இருந்து 1936 வரை அண்ணா தொழிற்சங்கவாதியாகச் செயல்பட்டார். அப்போது காங்கிரஸில் இருந்து திரு.என்வி.நடராசன் தொடர்பு எற்பட்டது. தொழிற்சங்கத்தில் பணியாற்றிய அண்ணாவுக்கு ஆல்பர்ட் ஜேசுதாசன் பொதுவுடமைவாதி திரு.பாசுதேவ் அவர்களின் தொடர்பு கிடைத்தது. சிறிது காலம் சென்னையில் உள்ள தொண்டை மண்டல துளுவ வெள்ளாளர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1936-ல் திரு.பாசுதேவ் நடத்திய பால பாரதி எனும் இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1937-ல் காஞ்சி மணிமொழியார் நடத்திய நவயுகம் எனும் இதழில் சிறிதுகாலம் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1936-ல் சென்னை மாநகராட்சித் தேர்தலில் பெத்துநாய்கன்பேட்டையில் நின்று தோற்றார்.
55 ஆண்டுகளுக்க முன் 1934-ல் திருச்சி தேவர் மன்றத்தில் நீதிக் கட்சி மாநாடு ஒன்றை பெரிய அனவில் நடத்திக்கொண்டிருந்தேன். மாநாட்டின் தலைவர் சர்.ஏ.இராமசாமி முதலியார் தன் பேச்சை மொழிபெயர்க்க ஒருவர் தேவை என்று கோரினார். வந்திருந்த பல வழக்கறிஞர்களை வேண்டினேன். அனைவரும் மறுத்துவிட்டனர். இவ்வளவு பெரிய மாநாட்டில் மொழிபெயர்பாளர் ஒருவரும் இல்லையே என்று வருந்தி வெட்கப்பட்டடேன்.
இந்நிலையில் ஒருவர் என்னிடம் வந்து இவர் கல்லூரி மாணவர். மொழிபெயர்பாளர் என்று கூறினார். இதை கேட்டதும் அதிக கோபம் வந்தது. பெரிய அரசியல் தலைவர்களின் பேச்சுகளைப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளைக்கொண்டு மொழிபெயர்ப்பதைவிட ஆங்கிலப்பேச்சு ஒன்றே மாநாட்டை சிறப்பிக்கும் என்று சும்மா இருந்துவிட்டேன். இந்த நிலையில் மொழிபெயர்க்க ஆள் வந்துவிட்டதா என்று முதலியாரிடமிருந்து செய்தி வந்தது. நான் வேறு வழி இல்லாமல் அதே மாணவரிடம் சென்று தம்பி உன் பெர் என்ன என்றேன். அண்ணாதுரை என்றார். ஊர் எது என்றேன் காஞ்சீபுரம் என்றார். என்ன செய்கிறாய் என்றேன். எம்.ஏ. படித்துவிடு சும்மாயிருக்கிறேன் என்றார். நன்றாக மொழிபெயர்ப்பாயா என்றேன். ஏதோ கொஞ்சம் தெரியும் என்றார்.
பேச்சுக்கு பேச்சு மொழிபெயர்ப்பு மிக சிறப்பாக நடைபெற்றது. நானே வெற்றி பெற்றதாக மகிழ்ந்தேன். வழக்கறிஞர்களிடம் சென்று மறுத்துவிட்டீர்களே, பார்தீர்களா? என்று பெருமிதத்துடன் வினவினேன். நாங்கள் மறுத்ததினால்தான் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் கிடைத்தார் என்று கூறி சிரித்தார்கள். சர்.ஏ.ராமசாமி முதலியாரிடம் மொழிபெயர்ப்பு எப்படி என்று வினவினேன். அதில் சிறிது சன்னப்பொடியும் கலந்திருந்தது எனக் கூறி புன்னகை புரிந்தார்.
. . . ஆங்கிலம் கற்றவர்களில் பலர் அம்மொழியிலேயே ஆழ்ந்துவிடுகின்றனர். இரண்டொருவர் கரையேறினனலும் அவர்கள் கரையேறியது தமிழ்நாட்டுக் கரையாக இருப்பதில்லை. ஆங்கிலக் கடல் நீந்தி தமிழ்க் கரையேறிய அறிஞர்களில் அண்ணாத்துரையும் ஒருவர்.
பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களெல்லாம், வெளியேரிக்கொண்டிருப்பது ஒரு வழக்கம். அப்போதெல்லாம் நான் பெரியாரை ஆதரித்தும், பிரிந்தவர்களை வெறுத்தும் வந்தவன். நான் நெருங்கிப் பழகியதால் என்னுடைய முறையும் வந்துவிட்டது. காலியான என் இடமும் உடனே பெரியாரால் நிரப்பப்பட்டது. என்னுடைய பதவிகளில் காரியதரிசி பதவிக்கு அண்ணாத்துரை, பொருள் வசூலிக்க பொன்னம்பலனாரும் அமர்த்தப்பட்டனர். பின்னர் அவர்கள் மூவரும் நெருங்கி பழக ஆரம்பித்ததால் வழக்கப்படி அவர்கள் வெளியேறும் முறையும் வந்துவிட்டது.
.... பேராசிரியர் ஆர்.வி.சேதுப்பிள்ளை அவர்களுடன் ஒரு முறையும், பேராசிரியர் ச.தோமசுந்தரபாரதியார் அவர்களுடன், கம்பராமயணம் பற்றிய சொற்போர் சென்னையிலும், சேலத்திலும் நடைபெற்றன. இந்த இரண்டிலும் யார் வெற்றி பெற்றனர் என்பது கேள்வியே இல்லை. இருவரும் சொற்போர் நிகழ்த்த ஒப்புக்கொண்டதே அண்ணாத்துரைக்கு ஒரு வெற்றியாக அமைந்துவிட்டது.
தமிழ்நாட்டில் படிப்பில்லாத மக்களில் பெரும்பான்மையோரைப் பேச்சின் மூலம் தட்டி எழுப்பிய பெருமையில் பெரியாருக்கும் பெரும் பங்கு உண்டு. அது போலவே படித்து முடித்த இளைஞர்களில் பெரும்பாலோரை பேச்சின் மூலம் தட்டி எழுப்பிய பெரும் பங்கு அன்பர் அண்ணாத்துரைக்கு உண்டு என உறுதியாகக் கூறலாம்.
அன்பர் அண்ணாத்துரை ஆங்கிலத்திலும் நன்றாக பேசும் ஆற்றல் படைத்தவர். இக்காலத்தில் மேடைப்பேச்சுகறில் பயனிலையை முன்வைத்து, செயல்படுபொருளை பின்னே வைத்துப் பேசப்படுகிறது. அது தூது அனுப்பினார், பதில் வந்தது என்றிராமல் அனுப்பினார் தூது, வந்தது பதில் என்றிருக்கும். இம்முறையை நம் நாட்டில் மேடைப் பேச்சுகளில் முதலில் புகுத்தியவர் அன்பர் அண்ணாத்துரையே ஆவார்.
. . . அன்பர் அண்ணாத்துரை அவர்களுடைய உள்ளம் தூய்மையானது. விருப்பு வெறுப்பற்றது. இதனாலேயே பலருடைய அன்புக்கும் இவர் பாத்திரமானார்.
. . . இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்திருந்தால். உலகத் தலைவர்களில் ஒருவராக ஆகியிருப்பார். (முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்)
சன்டே அப்ஸர்வர் பி.பாலசுப்பிரமணியம் அவர்களும், திரு.டி.ஏ.வி.நாதன் அவர்களும், அண்ணா நீதி கட்சியில் சேர்ந்து பணியாற்ற காரணமாயிருந்தவர்கள்.
அவர்கள் அண்ணாவின் சிற்றன்னை இராசாமணி அம்மையாரைச் சந்தித்து, அவர்களின் சம்மதத்தைப் பெற்று அண்ணாவை முதன் முதலில் நீதிக்கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று அண்ணாவை அறிமுகப்படுத்தினர்.
தொழிற்சங்கத்துறையில் அண்ணா!
கல்லூரப் படிப்பை முடித்த அண்ணா, முதன் முதலில் தொழிற்சங்கத் துறையில்தான் ஈடுபட்டார். தொழிறாளர்களிடையே ஒற்றுமை ஓங்கிவும் அவர்கள் உரிமை பெற்றவரிகளாக விளங்கிடவும் வேண்டுமென 1934-ம் ஆண்டிலிருந்து மூன்றாண்டுக் காலம் பாடுபட்டார்.
அப்போது தொழிற்சங்கத் துறையில் முனைந்து செயல்பட்டு வந்த தோழர்கள் பாசுதேவ், ஆல்பர்ட் ஜேசுதாஸ், என்.வி.நடராசன் போன்றவர்களோடு அண்ணாவும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கினார்.
இலட்சுமணபுரியில் நடைபெற்ற அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் மாநாட்டிற்கு தோழர ஜம்னாதாஸ் மேத்தா தலைமையில் ஒரு குழு சென்றது. அதில் அண்ணாவும் தமிழகப் பிரதிநிதிகளில் ஒருவராகச் சென்றார்.
இந்கிருந்து சென்றவர்கள் அண்ணாவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
மாநாட்டில் ஒரு தீர்மானத்தின் மீது சிறிது நேரம் பேசம் வாய்ப்பும் அண்ணாவுக்குக் கிடைத்தது. தொஞ்ச நேரப் பேச்சிலேயே மாநட்டுக்கு வந்திருந்த அனைவரையும் கவர்ந்துவிட்டார். பிறகு மாநாடு முடியும்வரை எல்லோரும் அண்ணாவையே வண்டாய் மொய்த்துக் கிடந்தார்கள்.
அந்த மாநாட்டில்தான், அண்ணா அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரசின் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொழிற்சங்கத் துறையிலிருந்த அண்ணாவை நேரடியாக அரசியலில் ஈடுபடச் செய்தவர் சன்டே அப்சர்வர் பி.பாலசுப்ரமணியம் அவர்கள்தான்!
பொது வாழ்க்கை
1934 ம் ஆண்டு கோவைக்கு அருகில் உள்ள திருப்பூரில் செங்குந்த இளைஞர் மாநாட்டில் இரையாற்றிய அண்ணா அங்கு தந்தை பெரியாரை சந்தித்தார்.
கல்லூரி நாட்களில் அண்ணா எழுதிய முதல் தமிழ்க் கட்டுரை மகளிர் சமத்துவம் என்பது.அதேபோன்று ஆங்கிலத்தில் ஆடீளுஊடீறு ஆடீக்ஷ ஞஹசுஹனுநு எனும் கட்டுரை எழுதினார்.
1934-ல் இருந்து 1936 வரை அண்ணா தொழிற்சங்கவாதியாகச் செயல்பட்டார். அப்போது காங்கிரஸில் இருந்து திரு.என்வி.நடராசன் தொடர்பு எற்பட்டது. தொழிற்சங்கத்தில் பணியாற்றிய அண்ணாவுக்கு ஆல்பர்ட் ஜேசுதாசன் பொதுவுடமைவாதி திரு.பாசுதேவ் அவர்களின் தொடர்பு கிடைத்தது. சிறிது காலம் சென்னையில் உள்ள தொண்டை மண்டல துளுவ வெள்ளாளர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1936-ல் திரு.பாசுதேவ் நடத்திய பால பாரதி எனும் இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1937-ல் காஞ்சி மணிமொழியார் நடத்திய நவயுகம் எனும் இதழில் சிறிதுகாலம் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1936-ல் சென்னை மாநகராட்சித் தேர்தலில் பெத்துநாய்கன்பேட்டையில் நின்று தோற்றார்.
55 ஆண்டுகளுக்க முன் 1934-ல் திருச்சி தேவர் மன்றத்தில் நீதிக் கட்சி மாநாடு ஒன்றை பெரிய அனவில் நடத்திக்கொண்டிருந்தேன். மாநாட்டின் தலைவர் சர்.ஏ.இராமசாமி முதலியார் தன் பேச்சை மொழிபெயர்க்க ஒருவர் தேவை என்று கோரினார். வந்திருந்த பல வழக்கறிஞர்களை வேண்டினேன். அனைவரும் மறுத்துவிட்டனர். இவ்வளவு பெரிய மாநாட்டில் மொழிபெயர்பாளர் ஒருவரும் இல்லையே என்று வருந்தி வெட்கப்பட்டடேன்.
இந்நிலையில் ஒருவர் என்னிடம் வந்து இவர் கல்லூரி மாணவர். மொழிபெயர்பாளர் என்று கூறினார். இதை கேட்டதும் அதிக கோபம் வந்தது. பெரிய அரசியல் தலைவர்களின் பேச்சுகளைப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளைக்கொண்டு மொழிபெயர்ப்பதைவிட ஆங்கிலப்பேச்சு ஒன்றே மாநாட்டை சிறப்பிக்கும் என்று சும்மா இருந்துவிட்டேன். இந்த நிலையில் மொழிபெயர்க்க ஆள் வந்துவிட்டதா என்று முதலியாரிடமிருந்து செய்தி வந்தது. நான் வேறு வழி இல்லாமல் அதே மாணவரிடம் சென்று தம்பி உன் பெர் என்ன என்றேன். அண்ணாதுரை என்றார். ஊர் எது என்றேன் காஞ்சீபுரம் என்றார். என்ன செய்கிறாய் என்றேன். எம்.ஏ. படித்துவிடு சும்மாயிருக்கிறேன் என்றார். நன்றாக மொழிபெயர்ப்பாயா என்றேன். ஏதோ கொஞ்சம் தெரியும் என்றார்.
பேச்சுக்கு பேச்சு மொழிபெயர்ப்பு மிக சிறப்பாக நடைபெற்றது. நானே வெற்றி பெற்றதாக மகிழ்ந்தேன். வழக்கறிஞர்களிடம் சென்று மறுத்துவிட்டீர்களே, பார்தீர்களா? என்று பெருமிதத்துடன் வினவினேன். நாங்கள் மறுத்ததினால்தான் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் கிடைத்தார் என்று கூறி சிரித்தார்கள். சர்.ஏ.ராமசாமி முதலியாரிடம் மொழிபெயர்ப்பு எப்படி என்று வினவினேன். அதில் சிறிது சன்னப்பொடியும் கலந்திருந்தது எனக் கூறி புன்னகை புரிந்தார்.
. . . ஆங்கிலம் கற்றவர்களில் பலர் அம்மொழியிலேயே ஆழ்ந்துவிடுகின்றனர். இரண்டொருவர் கரையேறினனலும் அவர்கள் கரையேறியது தமிழ்நாட்டுக் கரையாக இருப்பதில்லை. ஆங்கிலக் கடல் நீந்தி தமிழ்க் கரையேறிய அறிஞர்களில் அண்ணாத்துரையும் ஒருவர்.
பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களெல்லாம், வெளியேரிக்கொண்டிருப்பது ஒரு வழக்கம். அப்போதெல்லாம் நான் பெரியாரை ஆதரித்தும், பிரிந்தவர்களை வெறுத்தும் வந்தவன். நான் நெருங்கிப் பழகியதால் என்னுடைய முறையும் வந்துவிட்டது. காலியான என் இடமும் உடனே பெரியாரால் நிரப்பப்பட்டது. என்னுடைய பதவிகளில் காரியதரிசி பதவிக்கு அண்ணாத்துரை, பொருள் வசூலிக்க பொன்னம்பலனாரும் அமர்த்தப்பட்டனர். பின்னர் அவர்கள் மூவரும் நெருங்கி பழக ஆரம்பித்ததால் வழக்கப்படி அவர்கள் வெளியேறும் முறையும் வந்துவிட்டது.
.... பேராசிரியர் ஆர்.வி.சேதுப்பிள்ளை அவர்களுடன் ஒரு முறையும், பேராசிரியர் ச.தோமசுந்தரபாரதியார் அவர்களுடன், கம்பராமயணம் பற்றிய சொற்போர் சென்னையிலும், சேலத்திலும் நடைபெற்றன. இந்த இரண்டிலும் யார் வெற்றி பெற்றனர் என்பது கேள்வியே இல்லை. இருவரும் சொற்போர் நிகழ்த்த ஒப்புக்கொண்டதே அண்ணாத்துரைக்கு ஒரு வெற்றியாக அமைந்துவிட்டது.
தமிழ்நாட்டில் படிப்பில்லாத மக்களில் பெரும்பான்மையோரைப் பேச்சின் மூலம் தட்டி எழுப்பிய பெருமையில் பெரியாருக்கும் பெரும் பங்கு உண்டு. அது போலவே படித்து முடித்த இளைஞர்களில் பெரும்பாலோரை பேச்சின் மூலம் தட்டி எழுப்பிய பெரும் பங்கு அன்பர் அண்ணாத்துரைக்கு உண்டு என உறுதியாகக் கூறலாம்.
அன்பர் அண்ணாத்துரை ஆங்கிலத்திலும் நன்றாக பேசும் ஆற்றல் படைத்தவர். இக்காலத்தில் மேடைப்பேச்சுகறில் பயனிலையை முன்வைத்து, செயல்படுபொருளை பின்னே வைத்துப் பேசப்படுகிறது. அது தூது அனுப்பினார், பதில் வந்தது என்றிராமல் அனுப்பினார் தூது, வந்தது பதில் என்றிருக்கும். இம்முறையை நம் நாட்டில் மேடைப் பேச்சுகளில் முதலில் புகுத்தியவர் அன்பர் அண்ணாத்துரையே ஆவார்.
. . . அன்பர் அண்ணாத்துரை அவர்களுடைய உள்ளம் தூய்மையானது. விருப்பு வெறுப்பற்றது. இதனாலேயே பலருடைய அன்புக்கும் இவர் பாத்திரமானார்.
. . . இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்திருந்தால். உலகத் தலைவர்களில் ஒருவராக ஆகியிருப்பார். (முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்)
சன்டே அப்ஸர்வர் பி.பாலசுப்பிரமணியம் அவர்களும், திரு.டி.ஏ.வி.நாதன் அவர்களும், அண்ணா நீதி கட்சியில் சேர்ந்து பணியாற்ற காரணமாயிருந்தவர்கள்.
அவர்கள் அண்ணாவின் சிற்றன்னை இராசாமணி அம்மையாரைச் சந்தித்து, அவர்களின் சம்மதத்தைப் பெற்று அண்ணாவை முதன் முதலில் நீதிக்கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று அண்ணாவை அறிமுகப்படுத்தினர்.
தொழிற்சங்கத்துறையில் அண்ணா!
கல்லூரப் படிப்பை முடித்த அண்ணா, முதன் முதலில் தொழிற்சங்கத் துறையில்தான் ஈடுபட்டார். தொழிறாளர்களிடையே ஒற்றுமை ஓங்கிவும் அவர்கள் உரிமை பெற்றவரிகளாக விளங்கிடவும் வேண்டுமென 1934-ம் ஆண்டிலிருந்து மூன்றாண்டுக் காலம் பாடுபட்டார்.
அப்போது தொழிற்சங்கத் துறையில் முனைந்து செயல்பட்டு வந்த தோழர்கள் பாசுதேவ், ஆல்பர்ட் ஜேசுதாஸ், என்.வி.நடராசன் போன்றவர்களோடு அண்ணாவும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கினார்.
இலட்சுமணபுரியில் நடைபெற்ற அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் மாநாட்டிற்கு தோழர ஜம்னாதாஸ் மேத்தா தலைமையில் ஒரு குழு சென்றது. அதில் அண்ணாவும் தமிழகப் பிரதிநிதிகளில் ஒருவராகச் சென்றார்.
இந்கிருந்து சென்றவர்கள் அண்ணாவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
மாநாட்டில் ஒரு தீர்மானத்தின் மீது சிறிது நேரம் பேசம் வாய்ப்பும் அண்ணாவுக்குக் கிடைத்தது. தொஞ்ச நேரப் பேச்சிலேயே மாநட்டுக்கு வந்திருந்த அனைவரையும் கவர்ந்துவிட்டார். பிறகு மாநாடு முடியும்வரை எல்லோரும் அண்ணாவையே வண்டாய் மொய்த்துக் கிடந்தார்கள்.
அந்த மாநாட்டில்தான், அண்ணா அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரசின் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொழிற்சங்கத் துறையிலிருந்த அண்ணாவை நேரடியாக அரசியலில் ஈடுபடச் செய்தவர் சன்டே அப்சர்வர் பி.பாலசுப்ரமணியம் அவர்கள்தான்!
பொது வாழ்க்கை
தந்தை பெரியாருடன் 1936-ல் இருந்து இணைந்து சுற்றுப்பயணம் செய்தார். வடநாட்டில் பெரியார் சுற்றுப்பயணம் செய்தபோதுத, உடன் சென்ற அண்ணா தந்தை பெரியாரின் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். அப்போது கல்கத்தாவில் இருந்த பொது உடமை வாதி எம்.என்.ராய் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கார் அவர்களைச் சந்தித்தபோது அண்ணா உடன் இருந்து மொழி பெயர்ப்பு செய்தார். அப்போது அண்ணாவுக் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களான திரு.டி.ஏ.வி.நாதன், திரு.பாலசுப்பிரமணியம் போன்றவர்களின் தொடர்பு கிடைத்தது.
சென்னையில் உள்ள நூலகங்களைன பண்டிட் ஆனந்தன் நூலகம், சென்னை மாநகராட்சி நூலகம், கன்னிமாரா நூலகம் ஆகியவைகளைஇ அண்ணா கல்லூரி மாணவராக இருந்தபோதே பயன்படுத்தி தன் அறிவை வளர்த்துக்கொண்டார்.
1937-ல் இருந்து 1940 வரை அண்ணா அவர்கள் ஈரோடு சென்று, தந்தை பெரியார் அவர்களின் இதழ்களான குடியரசு, விடுதலை, பகுத்தறிவு ஆகியவற்றில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். கல்கத்தா காய்ச்சல், ரிப்பன் மண்டபத்து மகான்கள், ஓமான் கடற்கரையிலே போன்ற சிறப்பு மிக்கக் கட்டுரைகளை எழுதினார். அப்போது நக்கீரன், பரதன், வீரன் எனும் புனைப் பெயர்களில் பல கட்டுரைகளை வரைந்தார். 1938-ல் முதல் இந்தி எதிர்ப்பு போர் தந்தை பெரியார் தலமையில் தொங்ககியது. அண்ணா முதல் தளபதியாகப் பொறுப்பேற்று நான்கு மாதம் சிறை தண்டனைப் பெற்றார்.
தந்தை பெரியாருடன் பணியாற்றிய அந்த காலகட்டத்தில் அண்ணாவுக்கு கீழ்கண்டவர்களுடன் தொடர் ஏற்பட்டது. திரு.ப.ஜீவானந்தம், திரு.கி.ஆ.பெ.விசுவநாதம், பனகல். பொப்பிலி அரசர்கள், மறைமலை அடிகள், திரு.வி.கல்யாணசுந்தரனார், திரு.சிங்கரவேலர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பி.பாலசுப்பிரமணியம், சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், முவாலூர் இராம மிருதம்மையார், திருமதி. தர்மாம்பாள், திருமதி. மீனாம்பாள் சிவராஜ், திரு.டி.ஏ.வி.நாதன், ராஜா.சர்.குமார முத்தையா, ஆற்காடு. இராமசாமி(முதலியார்), அ.க.தங்கவேலர்.
திரு. என்.வி.நடராசன் - 1935
நான் அண்ணா அவர்களுடன் ஏறத்தாழ 32 ஆண்டுகளாகத் தொடர்புகொண்டிருக்கிறேன். முதல் நாலைந்து ஆண்டுகள் அவரது அரசியல் கருத்துக் மாறபட்ட கட்சியைச் சார்ந்தவனாகவும், 1937 இறுதியில் அண்ணா அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றவனாகவும் (கட்சியைச் சார்ந்தவனாகவும்) இருந்து வருகிறேன். இந்தக் கட்டங்களில் ஏற்பட்ட நட்பு - பந்தபாசம் - நிதானமாக உறுதியாக வளந்ந்து, அண்ணா அவர்கள் ஓர் அரசியல் கட்சித் தலைவராக மட்டுமின்றி குடும்பத் தலைவராகவும் வளங்குசிறார்கள். இநவ்வித உறவு எனக்கு மட்டுமல்ல கழகப் பணிஅய எனது உயிரினும் மேம்பட்டது என்று யார் யார் மனமார எண்ணிப் பணியாற்றி வருகிறார்களோ அவர்கள அனைவருக்குமே அண்ணா அவர்கள் குடும்பத் தலைவர்தான்.
எனவேதான் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் கழகத்திற்கும் உள்ள அடிப்படையே சற்று மாறுபட்டதாகவும் இருந்து வருகிறது. சிலருக்கு இது ஆச்சரியமாகவும் இருக்கக் கூடும். இதன் தன்மையை நடைமுறையில் உணர்ந்து பார்த்தவர்களுக்கே தெரியும்-புரியும்.
அறிஞர் அண்ணா அவர்களை நான் முதன் முதலாகச் சந்தித்தது, மறைந்த தொழிலாளர் தலைவர் சி.பாசுதேவ் எம்.எல்.சி. அவர்கள் மூலமாகத்தார்.
1934-34-ம் ஆண்டுகளில் நான் காங்கிரசைச் சார்ந்தவனாகயிருப்பினும் தொழிலாளர் இயக்கத்தைப் பொருத்தவரையில் மற்ற கட்சியினரோடும் சேர்ந்து பணியாற்றுவேன். அதாவது தொழிலாளர் நலனே முதன்மையானது என்பது எனது குறிக்கோள். அந்த முறையில் தோழர்; சி.பாசுதேவ் அவர்களும் அறிஞர் அண்ணா அவர்களும் நீதிக் கட்சியை சார்ந்தவர்களாயினும் பொதுவாகத் தொழிலாளர் முன்னேற்றத்திற்குப் பணியாற்ற யார் முன்வந்தாலும் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எனக்கு ஆர்வம் இருந்துவந்தது.
1934-ம் ஆண்டு என்று கருதுகிறேன். ரிக்ஷா தொழிலாளர்களுக்கென்று ஒரு சங்கம் அமைக்கவேண்டும் என்று தோழர் சி.பாசுதேவ், எஸ்.நடெசனார் வி.வி.முருகேசன், என்.டி.முத்து, தில்லை ராசன் போன்ற தொழிற் சங்கத் தலைவர்கள் கலந்து பெசுவதாக முடிவு செற்திருந்தார்கள். அக்கூட்டத்திற்கு என்னையும் வருமாறு ழைத்திருந்தார்கள்.
அந்த ஆலோகனைக் கூட்டம் எங்கு நடைபெற்றது தெரியுமா? சட்டக் கல்லூரிக்கு அருகே உள்ள நடைபாதையில். இரவு 1-மணி அளவில் அந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் என்னை அண்ணா அவர்களுக்கு தோழர் பாசுதேவ் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார்.
அன்று அவருடன் ஏற்பட்ட அத்தொடர்பு பின்னர் எங்கள் தொழிற் சங்கசார்பில் அன்றைய அரசினருக்கு எழுதும் மடல்களைக்கூட அவரது உதவியைப் பெற்றே செய்துவரும் நிலைக்கு வளர்ந்தது.
தொழிற்சங்கம் அமைப்பதில் அண்ணாவின் ஒத்துழைப்பைப் பெற்றே தோழர். கி. பாசுதேவ் செய்வார்.
தொழிற்சங்கத் துறையில் அறிஞர் அண்ணா அவர்கள் அன்று என்ன கருத்து தொண்டிருந்தார்களோ அந்தக் கருத்தை இன்றும் கைவிடாமலிருப்பது போற்றுதற்குரியதாகும்.
தொழிற் சங்கங்கள் அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாக இருத்தல் கூடாது. அதனால் தொழிற் சங்கத்தின் ஒன்றுபட்ட தன்மை சிதறுண்டுபோகும், ஆனால் தொழிலாளர்கள் அரசியலில் மிகவும் அக்கறைதொண்டாகவேண்டும், எனினும் அந்த அரசியலில் நோக்கங்கள் - வேறுபாடுகள் தோழிற் சங்கப் பணிகளில் குறுக்கிடக் கூடாது.
நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தபோது-சென்னை பக்கிங்காம்-கர்னாடிக் ஆலைத் தொழிலாளர்கள் மிகப் பெரிய வேலை நிறுத்தத்தை நீதிக்கட்சி அரசு அடக்க முற்பட்டது. அதுசமயம் அறிஞர் அண்ணா அவர்கள் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராய் இருந்தும், வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தந்தார்கள். தொழிலாளர் உரிமைக்காக பல கூட்டங்களில் பேசினார்கள், எனவே கட்சி கண்ணோட்டத்தை தொழிற்சங்கக் கட்டுக்கோப்பினை சிகைவுறச் செய்யும் என்று அறிஞர் அண்ணா அவர்கள் அன்றே அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, தீவிரமாகப் பேசி இறுதியாக மிகச் சாதாரண காரியங்களைச் செய்வதைக் காட்டிலும் நிதானமாகச் பெசி உருப்படியான திட்டத்தைச் செயல்படுத்துவதுதான் தொழிலாளர் சங்கப் பணியில் அடிப்படையாகக் கொள்ளவேண்டிய முறையென்பதும் அண்ணா அவர்கள் தொழிலாளர் இயக்கப் பணிபற்றி மேற்கொண்டுள்ள கருத்தாகும்.
எனவே அறிஞர் அண்ணா அவர்களின் 60-வது ஆன்று பிறந்த நாளை நாடெங்கும் கொண்டாடும் தொழிற் சங்கங்களும், தொழிலாளர் தோழர்களும் அண்ணா அவர்கள் தொழிற் சங்கத் துறையில் மேற்கொண்டுள்ள சீரிய கருத்தைச் சிந்தித்து அதன் வழி நின்று தொழிலாளர் சமுதாயம் தனது நியாயமான கோரிக்கைகளை நேர்மையான வழியில் பெற்று இதன் வாயிலாகப் பொதுவாக நாட்டுக்கே நல்வாழ்வு அமையப்பெற உறுதிதொள்ள வேண்டுகிறேன்.
தொழிற் சங்க வாதிகளுக்கு மற்ற எல்லோரைக் காட்டிலும் அரசியல் இன்றியமையாததுதான். ஆனால் அவ்வித அரசியல் தொள்கைகளை அவரவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளின் வாயிலாக நினறு பணியாற்றுவதுதான் சிறந்த பண்பாடாகும்.
இந்த வேண்டுகோளை தொழிற்சங்கத் துறையில் பணியாற்றும் நண்பர்களுக்கு; தொழிலாளர் தோழர்களுக்கு எனது வேண்டுகோளாக வைத்து; முரசொலி மூலமாக எனது வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
அண்ணாவைப் பற்றிய ஒரு சில நினைவுகளை இந்தக் கட்டுரையில் தரலாம் என்றெண்ணி, எந்தெந்த நிகழ்ச்சிகளை சொல்லலாம் என்று தீர்மானிக் முடியாமல் திக்குமுக்காடிவிட்டேன் எனென்றால் அண்ணா அவர்கள் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளால் மட்டும் மற்றவர்களை மலைக்க வைக்கவில்லை. அவரது அசைவுகள் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லும்.
மொத்தத்தில் அண்ணா என்ற ஒரு வார்த்தைக்குள் இநத அகிலமே அடக்கம். அந்த ஒரு வார்த்தைக்குள் எத்தனை எத்தனைக் கவிதைகள் . . .! அப்பப்பா . . . சொல்லி மாளாத அளவிற்கு அவர் ஒரு சுரங்கப் பெட்டகம்! அண்ணா அவர்கள பிறந்ததால் இருபதாம் நூற்றாண்டுக்குப் பெருமை; தமிழ்மொழிக்குப் பெருமை; தமிழ் சமுதாயத்திற்குப் பெருமை. ஏன் . . . தமிழ்நாடு என்று சொல்லுக்கேகூட பெருமை!
அவர் ஒரு உயிராக பிறக்கவில்லை. உலகமாகவே விறைந்தார். அவர் ஒரு குழந்தையாகப் பிறக்கவில்லை. தமிழ்நாட்டில் குடிகொண்டிருந்த மூடநம்பிக்கைகளை குழிதோண்டிப் புதைக்கும் விடவெள்ளியாகப் பிறந்தார்.
அண்ணாவின் பெருமைகளில் தலையாயது, அவர் என்னைப் பொன்ற தன்னிலும் மூத்தவர்களைக் கூட அண்ணா என்று விளிக்க வைத்தாலே அதுதான் என்று உறுதியாகக் கூறுவேன். அள்ளாதுரை! அண்ணாதுரை. . .! என்று வாய் மணக்க அழைத்து வந்த தந்தை பெரியார் அவர்கள் கூட அண்ணா அவர்ககளின் இரங்கல் செய்தியில் - அண்ணா நாலரைக் கோடி தமிழ் மக்களுக்கும் பேரிழப்பைத் தந்துவிட்டு போய்விட்டார் என்று சொன்னாரே - அதைவிட அண்ணா அவர்களின் பெருமையை வேறு எப்படி சொல்லிட இயலும்? வரலாற்றை சிலர் படிக்கிறார்கள். சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள். அண்ணாவோ வரலாறாகவே வாழ்ந்தவர்க என்பது மிகையல்ல! 1933-ல் கோவை மாவட்டம் (இப்போதைய பெரியார் மாவட்டம்) காங்கேயத்தில் முதலாவது செங்குந்தார் இளைஞர் மாநாடு நடைபெற்றது. தந்தை பெரியார் அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்து அண்ணா அந்த மாநாட்டில் சிறப்புரையாற்றினார். ஏறத்தாழ 2 மணி நேரம் பேசினார். அவரது பேச்சில் மூடநம்பிக்கையைப் பற்றிய சாடல்களும் ஜாதிக் தொடுமைகளைப் பற்றிய கண்டிப்புகளும் அதிகமாக காணப்பட்டது.
மேடையில் அமர்ந்திருந்த தந்தை பெரியார் அண்ணாவின் பேச்சை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அண்ணாவுக்கு தந்தை பெரியாரோடு பழக்கம் இல்லாத நேரம். எனவே அண்ணா தனது பேச்சை முடித்ததும் மேடையைவிட்டு இறங்கி வெளியே போய்விட்டார். பெரியார் கூடடம் முடிந்ததும் அண்ணாவை ழைத்து வரச் சொல்லி, இந்த இளம் வயதில் இவ்வளவு அருமையாகப் பேசுகிறாயே; உனக்குக் கண்டிப்பாக ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது! என்று பாராட்டிவிட்டு,
நீங்க என்ன படிச்சிருக்கீங்க? என்று கேட்டார்.
எம்.ஏ. எழுதியிருக்கிறேன் என்றார் அண்ணா. பாஸ் பண்ணினதும் என்ன செய்யப் போகிறீங்க? என்றார் தந்தை பெரியார். ஏன் நீங்களும் என்னோடு சேர்ந்து அரசியல் பணி செய்யக்கூடாது என்று கேட்ட பெரியார் மேற்கொண்டு அரசியல் பணிகள் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது பற்றியும் சில அறிவுரைகளை ஆலோசனைகளாக நல்கினார்.
அண்ணா, தந்தை பெரியாரின் பேச்சை மீற இயலவில்லை.
பெரியாரின் விருப்பப்படியே, அண்ணா நீதிக்கட்சியில் சேர்ந்து பணியாள்ள முடிவு செய்தார். அப்போதே - இரு வாரத்திற்கொரு முறை வந்து கொண்டிருந்த விடுதலை ஏட்டில் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்று தனது அண்ணங்களுக்கு எழுத்து வடிவம் தரச் தொடங்கினார்.
படித்து முடித்து பட்டம் பெற்றதும் எங்கோ ஒரு வேலைக்குச் சென்று, ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்க வேண்டிய அண்ணாவை-அகிலம் புகழும் தலைவராக மாற்றி, பேச்சாலும் எழுத்தாலும் கோடானு கோடி மக்களைக்
கவர்ந்தவராக ஆக்கி, மாட மாளிகைகளிலும் கூட கோபுரங்களிலும் மட்டுமே நிரந்தரக் குத்தகை எடுத்துக் கொண்டு தங்கியிருந்த அரசியலை, மரத்தடிக்கும், மண்குடிசைக்கும் கொண்டு வந்த பெருமைக்குரியவராக்கி - சாமன்யர்களும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திட முடியும் என்ற நிலையை ஒருவாக்கிக் காட்டிட வழி வகுத்துக் கொடுத்தது அண்ணாவின் இந்த செங்குந்தர் இளைஞர் மாநாட்டுப் பேச்சுதான்!
1936-ம் ஆண்டு, சென்னை மாநகராட்சித் தேர்தலில் தங்கசாலை அருகேயுள்ள பெத்துநாயக்கன் பேட்டை வட்டத்தில் நீதிக்கட்சி சார்பில் அண்ணா பேட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாலசுப்பிரமணியம் என்பர் போட்டியிட்டார். அவரும் அண்ணாவைப் போலவே எம்.ஏ. படித்தவர்.அப்போது அண்ணாவை எதிர்த்து, அப்போதைய காங்கிரஸ் முன்னணித் தலைவர்களான எஸ்.சர்தியமூர்த்தி, பி.சி.கோபாலரத்தினம் மற்றம், டி.செங்கல்வராயன், என்.வி.நடராஜன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள் .
ஆனால் அண்ணா தன்னந்தனியாக - ஒரு மெக்காப்போனை கையில் எடுத்துக்கொண்டு தெருத்தெருவாகச் சென்று ஒவ்வொரு தெரு முனையிலும் நின்று பிரச்சாரம் செய்தார்.
என்னையும் நான் சார்ந்திருக்கிய கட்சியையும் தாறுமாறாக விமர்சிக்கம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் என்னை ஒரே மேடையில் சந்தித்து என்னோடு விவாதிக்கத் தயாரா? என்று அறைகூவல் விடுத்தார்.
ஆனால் வேட்பாளர் பாலசுப்பிரமணியம் உட்பட காங்கிரஸ் தலைவர்க யாருமே அண்ணாவின் அறைகூவலை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.
இருந்தும் தேர்தலில் அண்ணா தோற்றுவிட்டார். ஆனால் அண்ணாவைத் தேடிய அவரது நண்பர்களுக்கு அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஒரு வேளை தேர்தல் முடிவு கண்டு தயரம் தாங்காமல் எங்காவது ஓடிவிட்டாரா? என்றுகூட நண்பர்கள் நினைத்தார்க்ள்.
ஆனால் அண்ணா அவர்கள் பட்டினத்தார் படம் பார்த்துவிட்டு சிரித்த முகத்தோடு திரையயரங்கைவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தார்.
நண்பர்கள் அவரிடம் ஓடி, என்ன அண்ணா! தேர்தலில் நீங்கள் தேற்றுவிட்டீர்கள்; இருந்தும் படம் பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக வருகிறீர்களே! என்று கேட்டார்கள். அதற்கு அண்ணா அவர்கள், தேர்தலில் போட்டியிடுவது நமது உரிமை; பிரச்சாரம் செய்வதும் நமது உரிமை; மக்களை அணுகி எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதுகூட நமது உரிமைதான். ஆனால் ஏன் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்ற கேட்கக்கூடிய உரிமை நமக்கேது? வெற்றியோ தோல்வியோ நம் கையில் இல்லை; மக்கள் கையில்தான் இருக்கிறது என்கிறபோது அதைக் கண்டு நாம் ஏன் வருத்தப்படவேண்டும்; துயரம் கொள்ள வேண்டும்? என்று சொன்னார்கள்.
தேல்வியைக் கண்டு துவளாது உள்ளம் - எதையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிற சுபாவம் அண்ணாவுக்கு அப்போதே இருந்திருக்கிறது.
தஞ்கை மாவட்டம் திருவாரூரில் திராவிடர் கழக மாநாடு சீரும் சிறப்புமான முறையில் - காலை முதல் மாலை வரை நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா அவர்கள், திராவிடநாடு பிரச்சியை வலியுறுத்தி தக்க சான்றுகளோடு, வரலாற்று நிகழ்ச்சிகளிலிருந்து உதாரணங்களைக் காட்டி தந்தை பெரியார் அவர்களே வியக்கும் வண்ணம், சுமார் மூன்று மணி நேரம் உரை நிகழ்த்தினார்கள். அந்தத் திறமையான பேச்சுக்கு அன்றைய மாலையே - அதுவரையிலும் சரி . . அல்லது அதற்குப் பிறதும் சரி . . . யாருக்குமே கிடைத்திராத ஒரு மாபெரும் பரிசு கிடைத்தது. அன்று மாலை மாயவரம் ஆற்றங்கரையில் திராவிடர் கழகத்தினர் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார்க்.ள வழங்கறிஞர் சிவசுப்பிரமணியம்என்பவரது தலைமையில் நடைபெற இருந்த அந்தக் கூட்டத்திற்கு, ஏறாளமான வழக்கறிஞர்களும், பட்டதாரிகளும் வருகை தந்திருந்தார்கள்.
தந்தை பெரியார் அவர்கதான் சிறப்புரை நல்குவதாக இருந்தது. அண்ணா அவர்கள் கூட அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தார்.
ஆனால், கூட்டம் ஆரம்பிக்கத் தொடங்கியதும் தந்தை பெரியார் அவர்கள் அண்ணாவை அழைத்து இந்தக் கூட்டத்தில் நான் பேசப்போவதில்லை. காரணம் இங்கே ஏராளமான வழக்கறிஞர்களும், பட்டதாரிகளும் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு புரிகிற விதத்திலும் அவர்களை வசப்படுத்துகிற விதத்திலும் உன்னால்தான் ஆணித்தரமான கருத்துக்களை எடுத்து வைக்க முடியும்; எனவே நீதான் இன்று சிறப்புரை ஆற்றவேண்டும் என்று கூறி மேடையைவிட்டு கீழே இறங்கி மக்களோடு அமர்ந்துவிட்டார்கள்.
இந்த பெருமை வேறு யாருக்குக் கிடைத்திருக்கிறது? தந்தை பெரியார் அவர்கள், தான் கீசூ அமர்ந்துகொண்டு இன்னொருவரைப் பேசச் சொல்லிக்கேட்டு மகிழ்ந்தார்க்ள என்று சொன்னால் - அது அகிலமே பாராட்டிய பேரறிஞர் அண்ணா ஒருவர்தான்!
அந்தக் கூட்டத்தில் - காலையில் நடைபெற்ற மாநாட்டுப் பேச்சைக் காட்டிலும் இன்னும் பல சீரிய கருத்துக்களை எடுத்துக்கூறி 3 மஒ நேரம் பேசி தந்தை பெரியார் அவர்கள் உட்பட எல்லோரது கவனத்தையும் தன்பால் ஈர்த்துக்கொண்டவர் அண்ணா.
அண்ணாவின் பேச்சை வென்றிடக்கூடிய பேச்சு அண்ணாவின் இன்னொரு பேச்சாகத்தான் இருந்திட இயலும் என்பதை அன்றைய நிகழ்ச்சி மெய்ப்பித்துக் காட்டியது.
1945-ம் ஆண்டு! அண்ணா ஈரோட்டில் விடுதலையில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொட்டிருந்த நேரம்.
விஞ்ஞான மேதை கோவை ஜி.டி. நாயுடுவும் சாமி கைவல்யம் சாமியாரும் அண்ணாவைப் பார்க்க ஈரோடு வந்தார்கள்.
சாமி கைவல்யம் சாமியார் அண்ணாவைத் தனியாக அழைத்துச் சென்று நாயுடு உங்க்ளை அவரது செயலாளராக வைத்துக் கொள்ள விரும்புகிறார்; உங்களுக்கு தனி பங்களா, கார் கோன்ற வசதிகளையும் செய்து தருகிறான் என்ற சொல்கிறார். நீங்கள் மறுக்காமல் ஒப்புக் கொள்ளவேண்டும் என்று சொன்னார்.
அண்ணா, கைவர்யம் சொன்னதைக் கேட்டு அப்படியா என்று வாய் பிளக்கவில்லை.
அரசியலில் தனக்கென்று ஒரு சாதனையை பிற்காலத்தில் ஊற்படுத்திக் காட்டுவதற்காக பிறந்த அண்ணா, அதை எப்படி ஒப்புக் கொள்வார்?
நான் தந்தை பெரியாருடன் இருந்து அரசியல் பணியாற்றுவதையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்; எனவே என்னை நீங்கள் வற்புறுத்திப் பயனில்லை என்ற தெளிந்த நீரோடை பேல - சிறிதும் சபலமின்றி பதில் தந்தார்.
வசதியைத் தேடியே ரேசியலுக்கு வரும் பல்லோர் மத்தியில் - வசதியை உதறித்தள்ளிவிட்டு உத்தமாராக அரசியல் வாழ்க்கையைத் தெடர்ந்தவர் அண்ணா!
காஞ்சியில் பேறிஞர் அண்ணா 07.03.1942-ல் திராவிட நாடு இதழைத் தொடங்கி காங்சியிலுள்ள குமரன் அச்சகத்தில் அச்சடித்து வெளியிட்டு வந்தார்.
வரலாறு
இன்னொருவருடைய அச்சகத்தில் அச்சடிப்பதால் பத்திரிகையில் வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக இருந்தது. இதனால் ஏராளமான சிரமங்களுக்கிடையே பத்திரிகை வந்து கொண்டிருந்ததது. இந்த சமயத்தில் தந்தை பெரியார் காங்சிக்கு வந்து திராவிட நாடு பத்திரிகையின் வரவு செலவுகளைப் பார்த்து, பத்திரிகை நஷ்டத்தில் வெளிவந்துககொள்டிருப்பதை அறிந்தார்.சொந்தத்தில் அச்சகம் தொடங்கினால், இந்த நஷ்டம் ஏற்படாது என்று எண்ணினார்.
அதானால் அண்ணாவை அழைத்து, சொந்தமாக இரு அச்சகம் தொடங்கும்படி கூறினார்.
அண்ணாவுக்கோ சொந்தமாக அச்சகம் தொடங்குகிற அளவுக்கு வசதியில். அப்படி வசதியிருந்தால் அவர்க ஏன் இன்னொருவர்க அச்சகத்தில் அடித்துக்கொண்டிருப்பார்?
தந்தை பெரியாரிடம் சொந்தமாக அச்சகம் தொடங்க வசதியின்மையை அண்ணா சொன்னார்.
தந்தை பெரியார் எதுபும் பதில் சொல்லாமல் ஊருக்குத் திரும்பிவிட்டார். இரண்டொரு நாட்களில் விடுதலை யில் ஒரு அறிக்கை வருகிறது.
அண்ணாதுரை திராவிடநாடு பத்திரிகை நஷ்டத்தில் நடத்திக்கொண்டிருக்கிறார். எனவே கழகத் தோழர்கள் அனைவரும் மனமுவந்து அண்ணாதுரை சொந்தமாக ஒரு அச்சகம் தொடங்கிட தாராளமாக நிதி உதவி அளித்திட முன்வரவேண்டும்.
நான் அந்த அச்சகத்திற்கு தேவையான எழுத்துக்களையெல்லாம் தருவதெனவும் - எஞ்சிய இயந்திரச் செலவுகளை கழகத் தோழர்கள் பகிர்ந்துகொண்ணவேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். எனவே இப்பொழுதிலிருந்தே அண்ணாதுரை அச்சக நிதி உதவி என்று கழகத் தோழர்கள் நிதி அனுப்பவேண்டுகிறேன். என்ற அந்த அறிக்கையை தனது பெயரிலேயே விடுத்திருந்தார்.
அந்த அறிக்கையில் இன்னொரு விபரத்தையும் குறிப்பிட்டிருந்தார். அண்ணாதுரை எம்.ஏ. படித்தவர். சிறந்த எழுத்தாளர்; பேச்சாள்ர். அவர் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் ஒரு பெரிய அரசாங்க வேலைக்குச் சென்று எந்தவிட கஷ்டமுமின்றி நிம்மதியாக இருந்திட முடியும். இருந்தாலும் அவர் அது கோன்ற வேலைகள் எதுபும் வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டு அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர். எனவே அவரது அரசியல் சிரமங்களை நாம்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
நிதி குவியத் தொடங்கியது. தேவைக்கு மேலும் நிதி வருவது நின்றபாடில்லை.
இனிதொடர்ந்து யாரும் நிதி அனுப்ப வேண்டாம்; அச்சகத்திற்கு கோதுமான நிதி வாந்தாகிவிட்டது என்று அண்ணா திராவிடநாடு இதழில் அறிக்கை வெளியிட்டு மேற்படியும் நிதி வராமல் செய்தார்.
வந்துகொண்டிருக்கும் நிதி உதவியை இனி தேவையில், நிறுத்துங்கள் போதும் என்று சொன்ன ஒப்பற்ற தலைவர் அண்ணா!
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் புதுமனை புகுவிழா அன்று மாலை, இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமனின் இசை விருந்து நடைபெற்றது.
இசைச் சித்தரின் பாடல்கள் மக்களை ஆனந்த வெள்ளத்தில் குளிப்பட்டிக் கொண்டிருந்தது, ஒரு சில பாடல்களைப் பாடிய பின்னர் இசைச் சித்தர் ஜெயராமன் அவர்கள் வரவுக்கு மேல் செலவு செய்யாதே; வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே என்னும் பாடலைப் பாடத் தொடங்கினார்.
இதைப் பக்கத்தில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த அண்ணா, உடனே இசைச் சித்தரைப் பார்த்து, பாடலைக் கொஞ்ச நேரம் நிறுத்துங்கள் என்ற சொல்லிவிட்டு வெளியே ஒருவரை அனுப்பி வெளியே நின்றுகொண்டிருந்த கே.ஆர்.ராமசாமியை உள்ளே அழைத்துவரச்சொல்லி - இசைச் சித்தருக்கும் பக்கத்தில் அமர வைத்து, இப்போது பாடலைத் தொடருங்கள் என்று இசைச் சித்தரைப் பார்த்து சொன்னார்கள்.
பாடல் தொடர்ந்தது; பந்தலே அதிரும்படியான கரவொலி அதனுடைய எதிரொலியாக இருந்தது.
கே.ஆர்.ராமசாமி தனது வரவுக்கு மிஞ்சிய செலவினைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அண்ணா சொல்லாமல் சொன்னதைப் புரிந்துகொண்ட மக்கன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தன்னுடைய நண்பர்கள், தன்னைச் சார்ந்தவர்கள் எப்போதுமே நன்றாக இருக்கவேண்டும்; அவர்கள் துயரத்தில் மூழ்கக் கூடாது; துன்பத்தில் உழலக் கூடாது என்பதில் அண்ணா எந்த அளபுக் கு கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்.
1952-ம் ஆண்டு கோவையில் ஒரு நண்பரின் வீட்டு நிகழ்ச்சிக்கு அண்ணா அவர்கள் வந்திருந்தார்கள். அப்போது கம்யூனிஸ்டு தோழர்களுக்கு, ஏனோ அண்ணா அவர்களின்பால் இனம் புரியாத இரு வெறுப்பு!
கோவைக்கு வருகை தந்த அவரைத் தாக்க வந்தார்கள்; அவரை பொதுவுடமை விரோதி என்று விமர்சித்தார்கள். சரமாரியாக பல கேள்விக்கணைகளைத் தொடுத்தார்க்.ள அண்ணா அவர்கள் கொஞ்சம் கூட அஞ்சவில்லை - அயரவில்லை.
எதிரிகளுடைய கணைகளுக்கு, பதில் கணைகளை பன்மடங்கு வலிவுள்ளதாக ஏவினார். வந்தவர்களுக்கு கோபம் வந்துவிட்டது. தங்களை இவன் மடக்குவதா என்று தீப்பிழம்புகளாக அநாவசியமாக மேலும் கோபம் கொண்டார்கள். அண்ணா அவர்களைப் பார்த்து இவ்வளவு தூரம் பேசுகிறீர்களே கார்ல் மார்க்ஸ் எழுதிய கேப்பிடல் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள்.
அதற்கு அண்ணா அவர்கள் மிகவும் சாந்தமாகவும், அலட்சியமாகவும் - நான் திருக்குறள் படித்திருக்கிறேன். என்று பதில் சொன்னார்கள்.
நாங்கள் கேட்டது கேப்பிடல் படித்திருக்கிறீர்களா என்பதுதான் - இது கம்யூனிஸ்ட் தோழர்கள்.
நான் திருக்குறளையே படித்து முடித்துவிட்டேன் என்கிறபோது கேப்பிடலை ஏன் தனியாகப் படிக்கவேண்டும்? கேப்பிடலில் தொழில் துறைகளைப் பற்றியும், ஆலைகளைப் பற்றியும் இருக்கிறது. ஆனால் திருக்குறளில் நீங்கள் சொல்கிற தொழில் துறைகளும் ஆலைகளும் மட்டுமில்லாது - மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்தும் இருக்கிறது - இது பேரறிஞர் அண்ணா.
வந்தவர்கள் வாயடைத்துப்போய்விட்டார்கள்.
அண்ணா அத்தோடு விடுவதாக இல்லை. கேப்பிடலைப் பற்றி படித்திருக்கிறீர்களா என்றா கேட்டீர்கள்; நான் படித்திருப்பது என்ன தெரியுமா? எம்.ஏ.பொருளாதாரம். எப்படி - கண், மூக்கு, காது என்றால் அவைக்ள எல்லம் முகத்திற்குள் அடக்கமோ அப்படித்தான் நீங்கள் சொல்கிற கேப்பிடலும் பொருளாதாரத்திற்குள் அடக்கம். பொருளாதாரம் படித்தவனைப் போய் கேப்பிடலைப் பற்றித் தெரியுமா என்று கேட்கிறீர்களே. . . பரிதாபமாக இருக்கிறது உங்களை நினைத்தால்! என்று சரியான சாட்டையடி கொடுத்தார்.
இதைக் கேட்டதும் - வந்திருந்த கம்யூனிஸ்ட் தோழர்களில் ஒருவரான கோடீஸ்வரராவ் என்பவர், அண்ணாவின் கரங்களைப் பிடித்து, அண்ணா! நான் இனி உங்களோடு சேர்ந்துவிடுகிறேன்; உங்கள் பேச்சுத் திறமையும், வாதத் திறமையும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது; மறுத்துவிடாதீர்கள்; என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி தன்னை அண்ணாவோடு பிணைத்துக்கொண்டார்.
மாற்றாரையும் தன் வயப்படுத்தும் திறமை அண்ணாவின் கைவந்த கலை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
பேரறிஞர் அண்ணா விடுதலைப் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த நேரம்! அவரது கட்டுரைகளுக்கும், தலையங்கங்களுக்கும் மக்களிடையே ஏகப்பட்ட வரவேற்பு.
இப்போதுள்ள ஒரு சில எழுத்தாளர்கள் சொல்வதுபோல - எனக்கு மூடு இல்லை, இப்போது எழுத வராது; எனக்கு இந்த இடம் ஒத்து வராது; காஜ்மீர் போனால்தான் எழுத வரும்; குற்றாலம் அருவியோரம் உட்கார்ந்து எழுதினால்தான் எழுத்துக்கள் ஊறும் என்றெல்லாம் அண்ணா அலட்டிக்கொண்டதேயில்லை.
பெரும்பாலும் நள்ளிரவுக்குப் பின்தான் தனது எழுத்துக்களை வெளிக்கொணர்வார். அதுவும் நண்பர்கள் யாராவது சந்திக்க வந்துவிட்டால் - நள்ளிரவுகூட இன்னும் கொஞ்சம் நகர்ந்து அதிகாலை என்றாகிவிடும்.
அதுவும் எழுதுவதற்கு வசதியான இடங்களை அவர் நாடிப் போனதே கிடையாது. ஈரோடு புகைவண்டி நிலையத்தில் ஒரு ஒளிமயமான விளக்கு எரிந்துகொண்டிருக்கும். பெரும்பாலும் அங்கு உட்கார்ந்துகொண்டிருந்துதான் அண்ணா அவர்கள் தனது உயிரோட்டமான எழுத்துக்களை உலவ விடுவார்.
ஒரு முறை சென்னையில் சனாதனிகளி மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் பெரியாரையும், சுயமரியாதை இயக்கத்தையும் கண்டித்துத் தீர்மானம் போட்டார்கள்.
இதைக் கேள்விப்பட்ட அண்ணா அந்த மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்திய டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரியையும் அந்த மாநாட்டுத் தீர்மானங்களையும் வன்மையாகக் கண்டித்து விடுதலை பத்திரிகையில் உணர்ச்சி பொங்க ஒரு நீண்ட கட்டுரை எழுதினார்.
இது தந்தை பெரியார் அவர்களுக்குத் தெரியாது. மறு நாள் காலையில் அவர் அண்ணாவை அழைத்து, அவர்கள் ஏதோ மாநாடு போட்டார்களாமே, அதைக் கண்டித்து ஏதாவது எழுதினால் தேவலாமே என்று சொன்னார்.
அதற்கு அண்ணா நான் நேற்றே அது பற்றி எழுதிவிட்டேனே என்று கூறி தான் எழுதியதைக் கொண்டு வந்து காட்டினார்.
தந்தை பெரியாருக்கு கொஞ்ச நேரம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு அவருள்ளே பூரிப்பு - பெருமிதம்!
நான் என்ன நினைத்தேனோ, எப்படி எழுதவேண்டும் என்று எண்ணினேனேளா அதை எப்படியே நீ சொய்திருக்கிறாய் என்று அண்ணாவை வெகுவாகப் பாராட்டினார்.
தந்தை பெரியார் ஒன்றை நினைப்பதற்குள்ளாகவே அதை நிறைவேற்றி முடித்துவிட வல்லவர் அண்ணா!(அ. சங்கரய்யா)
பெரியார் அவர்களோடு சயமரியாதை இயக்கத்தில் பணியாயற்றிக் கொண்டிருந்தபொழுது, சென்னையில் நான் பேசுகிற கூட்டங்களுக்கெல்லாம் தவறாமல் இரு குள்ளமான உருவம் வந்து செல்வதைக் கண்டேன். நான் வண்ணாரப்போட்டையில் பேசினாலும் வடபழனியில் பேசினாலும், மைலாப்பூரில் பேசினாலும், மாம்பலத்தில் பேசினாலும் அடையாற்றில் பேசினாலும் சரியே, சென்னையிலும், சென்னையைச் சார்ந்த சுற்றுப்புறங்களிலும என எங்கு நான் பேசினாலும் பேசுகிற அக்கூட்டங்கள் அனைத்திலும், நான் அந்த உருவத்தைக் கண்டபடி இருந்தேன்.
முதலில் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரப் பற்றுள்ள ஒரு இளைஞர்போலும் அவர் என்று எண்ணினேன். எனினும் அவ்வுருவமே நான் செல்லும் கூட்டங்களிதோறும் வர ஆரம்பித்ததால் எனக்கென்று ஒரு சந்தேகம் கிளம்ப, அருகில் இருந்த கூட்டம் நடத்துகிற பலலை மிகமிகக் குள்ளமாக, கறுப்பாக, குறுகுறுப்பான கண்களோடு காணப்படும் இந்த இளைஞர் யார்? என்று கேட்டேன். ஒருவராலும்சரியான கதிலை அளிக்க முடியவில்லை. ஆனால்; அவ்வுருவம் மட்டும் நான் செல்லும் கூட்டங்கட்குத் தொடர்ந்து வந்தபடியேயிருந்தது.
இந்நிலையில் என்னாலும் அவரை அறிய முடியவில்லை; பிறராலும் அறிந்து கூற முடியவில்லை. எனவே எனக்கென்று நான் கற்பித்துக்கொண்ட, அப்போதைய சூழ்நிலைக்கேற்ற விடையையே என்னுடைய யார் இந்த இளைஞர்? என்ற வினாவிற்கு விடையாக அமைத்துக்கொண்டேன்.
இந்த இளைஞர் வேறு யாருமல்ல, இவர்தான் அரசினாரால் நமக்கென்றே அனுப்பப்பட்டிருக்கிற சி.ஐ.டி. இல்லாவிட்டால் இப்படி நாம் செல்லும் கூட்டங்கள்தோறம் இநத இளைஞர் வரத் தேவையில்லை என்பதே அப்போது எனது முடிவாக இருந்தது.
இந்த முடிவிற்கு வந்ததற்குப் பிறகு வேறு யாரிடமும் யார் அந்த இளைஞர்? என்று கேட்பதில்லை. சென்னையில் நடைபெறும்பொழுது மட்டும் என் கண்கள் என்னையறியாமலே அந்த இளைஞரைத் தேடும். நான் தேடுகிற இடத்திலேயே அவரும் காட்சியளிப்பார்.
ஆனால், என்னுடைய முயற்சி பலன் பாணாமல்போன சில காலம் கழித்து எனக்கு அந்த ஒருவத்தைக் கொண்டிருந்த அந்த இளைஞர் யான் என்பது தெரிய வந்தது. அந்த இளைஞர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்க என்றும், அவருடைய கல்லூரிப் பருவத்தில் என் கூட்டங்களை விடாமல் தொடர்ந்து கேட்கவேண்டும் என்ற ஆர்வத்தினாலும் அமைதியாக இருந்து அரசியலை அறியவேண்டிய பருவமே மாணவப் பருவம் என்ற அழுத்தமான எண்ணத்தினாலும் அவ்வாறு கூட்டங்கட்கு வந்துகொண்டிருந்தார் என்றும் தெரியவந்தது.
நான் என்னைப் பின்பற்றிவரும் அந்த உருவம் சி.ஐ.டி. யே என்று தீர்மானமாக முடிவு கட்டுகிற அளவுக்கு, அன்னைப் பின்பற்றி வந்த அந்த சி.ஐ.டி. யார்? என்று அகட்கத் தோன்றும். அவர் வேறு யாருமல்ல. இன்று தனது எண்ணத்தாலும், எழுத்தாலும், பெச்சாலும் எங்கள் இதயத்தையெல்லாம் ஈர்த்துவிடடிருக்கிற; இதோ இந்த மேடையிலே உங்கள் முன்னே அமர்ந்திருக்கிற, நீங்கள் எல்லாம் அண்ணா..., அண்ணா என்று அழைத்து அகம் மகிழ்கிற தேழர் அண்ணாதுரை அவர்கள்தான்.
நான் இதை எதற்காக எடுத்துக்காட்டுகிறேன் என்றால்; மாணவர்களுக்கும் அரசியலுக்கும் உண்ண தொடர்பு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்ற சர்ச்சைக்குரிய நீண்டகாலப் பிரச்னைக்கு அவரின் மாணவப் பருவமே சிறந்த தீர்வாக இருக்கிறது என்பதனை எடுத்துக்காட்டுவதற்காகத்தான்,
அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி மேற்கண்டவாறு கூறியவர் மறைந்த பொதுவுடைமைத் தலைவர் ப.ஜீவானந்தம் அவர்கள். தகவல்: கரந்தை கணேசன்பெரியார் அவர்களின் சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளிலே மிகுந்த பற்றுடையவன் நான். அதன் காரணமாக 1934-ம் ஆண்டு முதலே பெரியார் அவர்களோடு நாங்கள் நெருங்கிப் பழகி வந்தோம். அந்த நாளில் தமிழ்மொழியை அழகாகவும், திறமையாகவும்
எழுதுபவர்களிடத்திலே எங்களுக்குத் தனி மதிப்புண்டு.
அப்போது நாங்கள் ஈரோட்டில் நாடகங்கள் நடித்துக்கொண்டிருந்தோம். 1937-ம் ஆண்டு என நினைக்கிறேன். அறிஞர் அண்ணா அவர்கள் ஈ.வெ.ரா. பெரியார் அவர்களின் விடுதலை இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். அறிஞர் அண்ணா அவர்களின் உணர்ச்சி மிகுந்த தலையங்கள்களை நாங்கள் தவறாமல் படிப்பது உண்டு.
காங்கிரஸ் தலைவர் பட்டாபி சீத்தாராமையாவோடு பொட்டியிட்டுத் தலைவர் தேர்தலில் வெற்றியடைந்தார் சுபாஷ் சந்திரபோஸ். அந்த வெற்றியினைப் பாராட்டி விடுதலை இதழில் ஒரு அருமையான தலையங்கம் வெளி வந்தது. மிக உணர்ச்சிகரமான தலையங்கம் அது. அறிஞர் அண்ணா அவர்கள் தாம் எழுதியிருந்தார் எங்கள் குழுவில் அப்போது அரசியல் உணர்வுடையவர்கள் அதிகம். அனைவரும் அறிஞர் அண்ணா அவர்களின் உணர்ச்சி நிறைந்த, ஆற்றல் வாய்ந்த தலையங்கங்களைப் படித்து அவருடைய தமிழ் நடையில் சொக்கிக் கிடந்தோம் ன்றே சொல்லவேண்டும்.
அண்ணா அவர்கள் ஈரோட்டில் எங்கள் நாடகங்களைத் தவறாமல் வந்து பார்ப்பார். பம்பாய் மெயில், வித்தியாசாகரர், தேச பக்தி, மேனகா, குமாஸ்தாவின் பென் முதலிய நாடகங்களிலே அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. இராமாயணம், கந்த லீலா, கிருஷ்ணலீலா முதலிய புராண நாடகங்களையும் அவர் பார்க்கத் தவறியதில்லை. நாடகத்துறையிலே அறிஞர் அண்ணா அவர்களுக்கிருந்த ஆர்வத்தையும், சுவைணுர்வையும் கண்டு நாங்கள் வியப்படைந்தோம். அதுபற்றி அவரோடு அடிக்கடி வாதிப்பது உண்டு. பொதுவாக அறிஞர் அண்ணா அவர்களை நாடகாசிரியராகவும், நடிகராகவும் நாம் காண்பதற்குரிய ஆர்வத்தைத் தூண்டியதே எங்கள் நாடகக் குழுதான் என்பதை நாம் பெருமையோடு சொல்கி கொளுவேன்.
அந்த நாளில் எங்கள் குமாஸ்தாவின் பெண் நாடகத்திற்கு அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய விமரிசனம் ஒன்றை நான் பொனேபோல் போற்றி வைத்திருந்தேன். சென்ற ஆண்டு சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு விழா மலர் வெளியிட்டபோது அந்த நீண்ட விமரிசனத்தையும் வெளியிட்டிருந்தேன். அதைப்படித்து வியப்படைந்த சில நண்பர்கள் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். 27 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு திறமையாக நாடகத்திற்கு விமரிசனம் எழுதும் ஆற்றல் வாய்ந்த ஒருவர் இருந்தார் என்பதை இந்த விமரிசன் இல்லாவிட்டால் எங்க்ளால் நம்பியிருக்கவே முடியாது, என ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அவ்வளவு அழகாக, சின்னங்சிறு வாக்கியங்களால் அமைந்துள்ள ஒரு சிறந்த நாடக விமரிசனம் அது. நான் அறிந்த பத்திரிகையிலே விமரிசனம் வந்ததும், நாடக விமரிசனம் என்று நான் முதன் முதலாகப் படித்தும் அந்த குமாஸ்தாவின் பெண் விமரிசனம்தான்! குமாஸ்தாவின் பெண் நாடகம் அண்ணா அவர்களை மிகவும் கவர்ந்தது. தாமும் நாடகம் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. நாடகங்களின் மூலம் மகத்தான சாதனைகளைச் செய்யலாமென்ற நம்பிக்கையும் உருவாக்கியது.
ஈரோடு முடிந்ததும் நாங்கள் வெளியூருக்கப் பயணமானோம். வழக்கம்போல் பெரியார் அவர்களைக் கண்டு விடைபெற்றோம். அப்போது அண்ணா அவர்களும் எங்களோடிருந்தார். மாதக் கணக்கில் நெருங்கிப் பழகியதால் அண்ணாவின் கண்கள் கலங்கின. பெரியார் அவர்கள் சிரித்துக்கொண்டே,
என்ன, அண்ணாதுரைக்கும் நாடகப் பைத்தியத்தை உண்டாக்கிவிட்டீர்களே! அவரும் உங்களோடு வந்துவிடுவார் போலிருக்கிறதே! என்றார். ஆம்; உண்மை; நிலைமை அப்படித்தான் இருந்தது. அண்ணா அவர்கள் ஈதோடு ரயில் நிலையத்தில் எங்களை அழியனுப்ப வந்திருந்ததோது கலங்கிய கண்களோடுதான் நாங்கள் விடைபெற்றோம். பற்றும், பாசமும் விவரித்துச் சொல்லமுடியாத அளபுக்கு எங்களிடையே வளர்ந்திருந்தன.
அதன் பிறகு எங்களிடையே இருந்த நட்பைக் கடிதங்கள் மூலம் பரிமாறிக்கொண்டடோம்.
1934-ல் நாங்கள் ஈரோட்டில் நடித்துக் கொண்டிருந்தபோது அண்ணா அவர்களின் பிரசித்தி பெற்ற சந்திரோதயம் என்னும் முதல் நாடகம் எங்கள் மேடையில் நடிக்கப் பெற்றது. அறிஞர் அண்ணா அவர்கள அந்நாடகத்தின் ஆசிரியராக மட்டுமல்லாமல் முக்கிய நடிகராகவும் காட்சி அளித்தார். எங்கள் நடிகருக்கெல்லாம் ஒரே குதூகலம். அண்ணா அன்ற பிரமாதமாக நடித்தார். பொஹரியார் அவர்கள் தலைமைதாங்கிப் பாராட்டியபோது, நானும் சில வார்த்தைகள் பேசியது எனக்கு நினைவிருக்கிறது.
இப்படியே தொடர்ந்தது சில நாடகங்களில் நடித்துவிட்டால் பரம்பரை நடிகர்களான நாங்களேல்லாம் இந்தத் தொழிலை விட்டுவிடும்படியாக இருக்கும் பொல் தோன்றுகிறது என்று கூறினேன். அவ்வளவு அற்புதமாக நடித்தார் அண்ணா.
ஒரு கட்டம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சந்திரோதயத்தில் அண்ணா ஜமீன்தாராக வருகிறார். ஜமீன்தாரிசத்தின் ஆணவம், சோம்பேறித்தனம் முழுவதையும் அப்படியே அப்பட்டமாகக் காட்டினார். உட்கார்ந்த நிலையிலேயே சாய்ந்துகொண்டு எதிரே நின்ற வேலையாளிடம் என் காலைத் தூக்கி மேலேவை என்று சொல்லி காலைத் தூக்குவதற்குக் கூட பணமூட்டைகளுக்கு பணியாட்கள் வேண்டுமென்ற உண்மையை அழகாக நடித்துக் காட்டினார்.
சந்திரோதயம் நாடகம் முடிந்த மறுனாள் உரையாடிக் கொண்டிருந்தபோது நான் கூறினேன்.
சந்திரோதயம் போன்ற நாடகங்களை நாங்கள் நடிக்க இயலாது, எங்களைப் போன்றவர்கள் நடிக்க முடியாத சில கருத்துக்கள் இந நாடகத்தில் இருக்கின்றன. பொதுவான சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களின் அடிப்படையில் ஒரு நாடகம் எழுதிக் கொடுங்கள்; நடிக்கிறோம். என்று கூறினேன். ஆண்ணா எழுதுகிறேன் என்றார். ஆனால் அந்த வாய்ப்பு எங்களுக்குக் கிட்டவில் நடிப்பிசைப்புலவர் நண்பர் கே.ஆர்.இராமசாமிக்குக் கிடைத்தது.
கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் கைது செய்யப்பெற்று வழக்கு நடந்து கொண்டிருந்தகாலம், நாங்கள் திருச்சிராப்பிள்ளியில் நடித்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் தஞ்சையில் நண்பர் கே.ஆர்.ஆர். அவர்கள் கிருஷ்ணன் நாடகசபை என்னும் பெரால் ஒரு குழுதொடங்குவதாகத் தகவல் கிடைத்தது. அரிஞர் அண்ணா அவர்களின் ஓர் இரவு என்னும் புதிய நாடகம் அரங்கேறுவதாக அறிந்தபோது பெரிதும் மகிழ்ந்தோம். ஆர்வத்தோடு தஞ்சை சென்று நாடகத்தையும் பார்த்து வந்தோம். அதைத் தொடர்ந்து அண்ணாவின் வேலைக்காரி நாடகமும் அரங்கேறியது. பொதுவாக அந்த ஆண்டினை நாடக மறுமலர்ச்சி ஆண்டு எனக் குறிப்பிடுவது முற்றிலும் பொருந்தும் திருச்சியில் எங்கள் அந்தமான் கைதி, முள்ளில் ரோஜா நாடகங்களும் தஞ்சையில் நண்பர் கே.ஆர்.இராமசாமி அவர்களின் ஓர் இரவு, வேலைக்காரி நாடகங்களும் நாடகசபையின் கவியின் கனவு, விதி ஆகிய நாடகங்களும், சென்னையில் என்.எஸ்.கே. நாடக சபையின் நாம் இருவர் நாடகமும் அந்த ஆண்டிலேதான் நடைபெற்றன.
ஓர் இரவு, வேலைக்காரி ஆகிய இரு நாடகங்களிலும் அறிஞர் அண்ணா அவர்கள் கையாண்டுள்ள உரைநடை புதுமையானது, எழுச்சிதரக் கூடியது உணர்ச்சி நிறைந்தது, மற்றவர்கள் விரும்பிப் பின்பற்றக் கூடியது. அறிஞர் அண்ணா அவர்களின் அந்த அற்புதமான உரை நடையினைப் பின்பற்றி இன்று ஒரு எழுத்தாளர் பரம்பரையே தோன்றியிருக்கிறது என்று சொன்னால் அது முற்றிலும் உண்மை. . . காலஞ்சென்ற கல்கி திரு.ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந நாடகங்களுக்கு எழுதிய விமரிசனத்தில் அறிஞர் அண்ணா அவர்களை தமிழ்நாட்டின் பெர்னாட் ஷா என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. 1946-ல் திருச்சி வானொலியில் நாடக வசனங்களைப் பற்றிப் பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அறிஞர் அணணா அவர்களின் நாடக உரை நடைச் சிறப்பினைப் பற்றி நான் போற்றிப் பாராட்டினேன்.
அறிஞர் அண்ணா அவர்களின் சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம் ஆகிய இருநாடகங்களையும் 1948-ல் தான் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சந்திரமோகன் நாடகத்தில் அவர் கங்கு பட்டராக வந்து ஆசனத்தில் அமர்ந்துகொண்டு மன்னனோடு வாதிடும் கட்டம் மறக்க முடியாத ஒன்று. அந்தக் கட்டத்தில் அண்ணா அவர்களின் உள்ளத்திலே தோற்றுவித்தன என்று சொல்லவேண்டும்.
நீதிதேவன் மயக்கம் நாடகத்தில் அண்ணா இராவணனாகத் தோன்றி குற்றவாளிக் கூட்டிலே நின்றுகொண்டு வாதிடும் கட்டம் மிக அற்புதமானது. நாடகத்தின் பயனை நன்கு உணர்ந்தவர்; நாடகத்துறைக்கு ஒரு பெருமையைத் தேடித் தந்தவர்; ஒரு மிகச்சிறந்த நடிகர் என்ற முறையிலே அறிஞர் அண்ணா அவர்களைக் கலைஞர்காளாகிய நாங்கள் என்றும் போற்றக் கடமைப்பட்டிருக்கிறோம்.
1940-ல் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய குமாஸ்தாவின் பெண் அல்லது கொலைகாரியன் குறிப்புக்கள் என்னும் முதல் நாவலுக்கு முன்னுரை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, அதில் அன்றே நான் குறிப்பிட்டேன்; தோழர அண்ணாதுரை அவர்கள் வருங்காலத் தமிழர் தலைவர் என்று, அன்ற அறிஞர் அண்ணா அவர்களுக்கு அறிஞர் என்ற சிறப்புப் பட்டம் இல்லை. தொடர்ந்து நாடகங்கள் எழுதிய பிறகே அந்தப் பட்டம் பொது மக்களால் அவருக்குத் தரப்பெற்றது.
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன் தோழர் அண்ணாதுரையாக எங்கள் உள்ளத்தை கவர்ந்தவர் அறிஞர் அண்ணாவாக, தமிழர் தலைவராக மலர்ந்து இன்று மூன்றரைக் கோடி தமிழ் மக்களின் இதயங்களில் இடம் பிடித்து, இந்திய துணைக் கண்டத்தின் ஏனையப் பகுதியினரையும் ஈர்த்து, பிற நாட்டினரும் கண்டு பெருமை பே.சும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருப்பதைப் பார்க்கும்போது எங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
அறுபதாவது ஆண்டினைத் தொடங்கும் நாடகக் கலைச்செல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் உடல் வலிமையோடும், உளத்திண்மையோடும் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழுலகை வாழ்விக்குமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
என்ன, அண்ணாதுரைக்கும் நாடகப் பைத்தியத்தை உண்டாக்கிவிட்டீர்களே! அவரும் உங்களோடு வந்துவிடுவார் போலிருக்கிறதே! என்றார். ஆம்; உண்மை; நிலைமை அப்படித்தான் இருந்தது. அண்ணா அவர்கள் ஈதோடு ரயில் நிலையத்தில் எங்களை அழியனுப்ப வந்திருந்ததோது கலங்கிய கண்களோடுதான் நாங்கள் விடைபெற்றோம். பற்றும், பாசமும் விவரித்துச் சொல்லமுடியாத அளபுக்கு எங்களிடையே வளர்ந்திருந்தன.
அதன் பிறகு எங்களிடையே இருந்த நட்பைக் கடிதங்கள் மூலம் பரிமாறிக்கொண்டடோம்.
1934-ல் நாங்கள் ஈரோட்டில் நடித்துக் கொண்டிருந்தபோது அண்ணா அவர்களின் பிரசித்தி பெற்ற சந்திரோதயம் என்னும் முதல் நாடகம் எங்கள் மேடையில் நடிக்கப் பெற்றது. அறிஞர் அண்ணா அவர்கள அந்நாடகத்தின் ஆசிரியராக மட்டுமல்லாமல் முக்கிய நடிகராகவும் காட்சி அளித்தார். எங்கள் நடிகருக்கெல்லாம் ஒரே குதூகலம். அண்ணா அன்ற பிரமாதமாக நடித்தார். பொஹரியார் அவர்கள் தலைமைதாங்கிப் பாராட்டியபோது, நானும் சில வார்த்தைகள் பேசியது எனக்கு நினைவிருக்கிறது.
இப்படியே தொடர்ந்தது சில நாடகங்களில் நடித்துவிட்டால் பரம்பரை நடிகர்களான நாங்களேல்லாம் இந்தத் தொழிலை விட்டுவிடும்படியாக இருக்கும் பொல் தோன்றுகிறது என்று கூறினேன். அவ்வளவு அற்புதமாக நடித்தார் அண்ணா.
ஒரு கட்டம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சந்திரோதயத்தில் அண்ணா ஜமீன்தாராக வருகிறார். ஜமீன்தாரிசத்தின் ஆணவம், சோம்பேறித்தனம் முழுவதையும் அப்படியே அப்பட்டமாகக் காட்டினார். உட்கார்ந்த நிலையிலேயே சாய்ந்துகொண்டு எதிரே நின்ற வேலையாளிடம் என் காலைத் தூக்கி மேலேவை என்று சொல்லி காலைத் தூக்குவதற்குக் கூட பணமூட்டைகளுக்கு பணியாட்கள் வேண்டுமென்ற உண்மையை அழகாக நடித்துக் காட்டினார்.
சந்திரோதயம் நாடகம் முடிந்த மறுனாள் உரையாடிக் கொண்டிருந்தபோது நான் கூறினேன்.
சந்திரோதயம் போன்ற நாடகங்களை நாங்கள் நடிக்க இயலாது, எங்களைப் போன்றவர்கள் நடிக்க முடியாத சில கருத்துக்கள் இந நாடகத்தில் இருக்கின்றன. பொதுவான சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களின் அடிப்படையில் ஒரு நாடகம் எழுதிக் கொடுங்கள்; நடிக்கிறோம். என்று கூறினேன். ஆண்ணா எழுதுகிறேன் என்றார். ஆனால் அந்த வாய்ப்பு எங்களுக்குக் கிட்டவில் நடிப்பிசைப்புலவர் நண்பர் கே.ஆர்.இராமசாமிக்குக் கிடைத்தது.
கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் கைது செய்யப்பெற்று வழக்கு நடந்து கொண்டிருந்தகாலம், நாங்கள் திருச்சிராப்பிள்ளியில் நடித்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் தஞ்சையில் நண்பர் கே.ஆர்.ஆர். அவர்கள் கிருஷ்ணன் நாடகசபை என்னும் பெரால் ஒரு குழுதொடங்குவதாகத் தகவல் கிடைத்தது. அரிஞர் அண்ணா அவர்களின் ஓர் இரவு என்னும் புதிய நாடகம் அரங்கேறுவதாக அறிந்தபோது பெரிதும் மகிழ்ந்தோம். ஆர்வத்தோடு தஞ்சை சென்று நாடகத்தையும் பார்த்து வந்தோம். அதைத் தொடர்ந்து அண்ணாவின் வேலைக்காரி நாடகமும் அரங்கேறியது. பொதுவாக அந்த ஆண்டினை நாடக மறுமலர்ச்சி ஆண்டு எனக் குறிப்பிடுவது முற்றிலும் பொருந்தும் திருச்சியில் எங்கள் அந்தமான் கைதி, முள்ளில் ரோஜா நாடகங்களும் தஞ்சையில் நண்பர் கே.ஆர்.இராமசாமி அவர்களின் ஓர் இரவு, வேலைக்காரி நாடகங்களும் நாடகசபையின் கவியின் கனவு, விதி ஆகிய நாடகங்களும், சென்னையில் என்.எஸ்.கே. நாடக சபையின் நாம் இருவர் நாடகமும் அந்த ஆண்டிலேதான் நடைபெற்றன.
ஓர் இரவு, வேலைக்காரி ஆகிய இரு நாடகங்களிலும் அறிஞர் அண்ணா அவர்கள் கையாண்டுள்ள உரைநடை புதுமையானது, எழுச்சிதரக் கூடியது உணர்ச்சி நிறைந்தது, மற்றவர்கள் விரும்பிப் பின்பற்றக் கூடியது. அறிஞர் அண்ணா அவர்களின் அந்த அற்புதமான உரை நடையினைப் பின்பற்றி இன்று ஒரு எழுத்தாளர் பரம்பரையே தோன்றியிருக்கிறது என்று சொன்னால் அது முற்றிலும் உண்மை. . . காலஞ்சென்ற கல்கி திரு.ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந நாடகங்களுக்கு எழுதிய விமரிசனத்தில் அறிஞர் அண்ணா அவர்களை தமிழ்நாட்டின் பெர்னாட் ஷா என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. 1946-ல் திருச்சி வானொலியில் நாடக வசனங்களைப் பற்றிப் பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அறிஞர் அணணா அவர்களின் நாடக உரை நடைச் சிறப்பினைப் பற்றி நான் போற்றிப் பாராட்டினேன்.
அறிஞர் அண்ணா அவர்களின் சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம் ஆகிய இருநாடகங்களையும் 1948-ல் தான் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சந்திரமோகன் நாடகத்தில் அவர் கங்கு பட்டராக வந்து ஆசனத்தில் அமர்ந்துகொண்டு மன்னனோடு வாதிடும் கட்டம் மறக்க முடியாத ஒன்று. அந்தக் கட்டத்தில் அண்ணா அவர்களின் உள்ளத்திலே தோற்றுவித்தன என்று சொல்லவேண்டும்.
நீதிதேவன் மயக்கம் நாடகத்தில் அண்ணா இராவணனாகத் தோன்றி குற்றவாளிக் கூட்டிலே நின்றுகொண்டு வாதிடும் கட்டம் மிக அற்புதமானது. நாடகத்தின் பயனை நன்கு உணர்ந்தவர்; நாடகத்துறைக்கு ஒரு பெருமையைத் தேடித் தந்தவர்; ஒரு மிகச்சிறந்த நடிகர் என்ற முறையிலே அறிஞர் அண்ணா அவர்களைக் கலைஞர்காளாகிய நாங்கள் என்றும் போற்றக் கடமைப்பட்டிருக்கிறோம்.
1940-ல் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய குமாஸ்தாவின் பெண் அல்லது கொலைகாரியன் குறிப்புக்கள் என்னும் முதல் நாவலுக்கு முன்னுரை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, அதில் அன்றே நான் குறிப்பிட்டேன்; தோழர அண்ணாதுரை அவர்கள் வருங்காலத் தமிழர் தலைவர் என்று, அன்ற அறிஞர் அண்ணா அவர்களுக்கு அறிஞர் என்ற சிறப்புப் பட்டம் இல்லை. தொடர்ந்து நாடகங்கள் எழுதிய பிறகே அந்தப் பட்டம் பொது மக்களால் அவருக்குத் தரப்பெற்றது.
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன் தோழர் அண்ணாதுரையாக எங்கள் உள்ளத்தை கவர்ந்தவர் அறிஞர் அண்ணாவாக, தமிழர் தலைவராக மலர்ந்து இன்று மூன்றரைக் கோடி தமிழ் மக்களின் இதயங்களில் இடம் பிடித்து, இந்திய துணைக் கண்டத்தின் ஏனையப் பகுதியினரையும் ஈர்த்து, பிற நாட்டினரும் கண்டு பெருமை பே.சும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருப்பதைப் பார்க்கும்போது எங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
அறுபதாவது ஆண்டினைத் தொடங்கும் நாடகக் கலைச்செல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் உடல் வலிமையோடும், உளத்திண்மையோடும் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழுலகை வாழ்விக்குமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
(முத்தமிழ் கலா வித்வ ரத்ன டி.கே.சண்முகம்)
1933 ஆம் ஆண்டு ஆனர்ஸ் தேர்வு எழுதினார் அவருடைய உற்ற நண்பருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் தேர்வு எழுத முடியவில்லை. அந்த உற்ற நண்பருக்காக தொடர்ந்து தேர்வு எழுதாமல் அண்ணா விலகிக்கொண்டார். அவர் எழுதி முடித்த இரண்டு தேர்வு தாள்களும் மிகச் சிறந்தது என்று பல்கலைக் கழகத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1935 ஆம் ஆண்டு அண்ணா ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தால். அண்ணா அவர்கள் சிறிது காலம் அன்றய ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களின் ஒருவராய் இருந்த பொப்பிலிராஜாவிடம் அவருடைய உதவியாளராக இருந்து, அவருடைய ஆங்கிலப் பேச்சை மொழிபெயர்த்து அவருடன் அன்றய சென்னை ராஜதானியில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார்.
1936 ஆம் ஆண்டு குமாரராசா முத்தையா செட்டியார் அவர்கள் அண்ணாவை தன்னிடம் உதவியாளராக வந்துவிடுங்கள் மாதம் ரூ. 120./ தருகிறேன் என வேண்டுகோள் விடுக்க அண்ணா அதற்கு நன்றி கூறி மறுத்துவிட்டார்.
1937 ஆம் ஆண்டு அண்ணா குடியரசில் துணை ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த போது, ஈரோடு வந்த ஜி.டி.நாயுடு, அண்ணாவை என்னிடம் உதவியாளராக வந்துவிடுங்கள் மாதம் ரூ. 250 -ம், காரும் பங்களாவும் தருகிறேன் என்றார். அதையும் அண்ணா மறுத்துவிட்டார்.
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் புரட்சி நாடெங்கும் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. அப்போது நம் தோழரகள் இந்தக் கிளர்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும் என்ற கருத்தை தந்தை பெரியாரிடம் தெரிவித்தார். ஆனால் தந்தை பெரியார் அதை மறுத்துவிட்டார்.
1942 ஆம் ஆண்டில் இந்தியாவில் வைஸ்ராயாக இருந்து ஆங்கிலேயர் அண்ணாவுக்கு அழைப்பு விடுத்தார். தனக்கும் தன் அரசாங்கத்திற்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்ய - பிரச்சார செயலாளராக நியமிக்கிறேன் - நல்ல சம்பளமும் தருகிறேன் என்று. அண்ணா அதற்கு நன்றி கூறி, அந்த அழைப்பை ஏற்க மறுத்தார்.
1944 ஆம் ஆண்டு பர்மாவில் அன்றய பிரதமர் யுநு அவருக்கு உதவியாளராகப் பணியாற்ற மாதம் ரூ. 2000 தருகிறேன், என்று அண்ணாவுக்கு அழைப்பு விடுத்தார். அண்ணா அதற்கும் நன்றி கூறிவிட்டு, அந்த பதவியை ஏற்க மறுத்தார்.
1937 ஆம் ஆண்டில், நான் பட்டுக்கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பில் பயின்றுகொண்டிருந்தபோதுதான், அறிஞர் அண்ணாவின் அருமை பெருமைகளை, முதன் முதலாகச் செவிவழி கேட்டு மகிழும் சீரிய வாய்ப்பினைப் பெற்றேன். 1937-ம் ஆண்டு, 1921 முதல் 1936 வரை சென்னை மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த நீதிக்கட்சியானது, தேர்தல் களத்திலே படுதோல்வியுற, காங்கிரசுக்கட்சி வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நேரம். தேர்தல் களத்தில் தோல்வியைத் தழுவிய நீதிக்கட்சியின் தலைவர்கள் பலர், கட்சியைவிட்டு உதுங்கிப் போய்விட்டனர். அந்த நேரத்தில், பகுத்தறிவுத் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், வீழ்ந்து பட்டுக்கிடந்த நீதிக் கட்சிக்கு எழுச்சியூட்டவும், அதன் கொள்கைகளையும், போட்பாடுகளையும் சீர்படுத்திச் செம்மைப்படுத்திச் செல்வாக்குப் பெறச் செய்யவும் முழு மூச்சோடு பாடுபடத் தொடங்கினார்கள். அதன் முதற்கட்டமாகச் சிதறுண்டு கிடந்த தொண்டர்களையெல்லாம் ஒன்று திரட்டி, ஓரணியில் கொண்டுவர, பெரியார் அவர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த துறையூரில், சிறப்பு மாநாடு ஒன்றினைக் கூட்டினார்கள். அந்து மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, அறிஞர் அண்ணாவுக்குப் பெரியார் அழைப்பு விடுத்தார்கள். பெரியாரின் அன்பு அழைப்பினை ஏற்று, அறிஞர் அண்ணா அவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு, சீரிய சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்கள். அத வரையில் அண்ணா அவர்க, சென்னையில் உள்ள இரு சிலருக்கு மட்டும் அறிமுகமானவராக விளங்கினார்கள். துறையூர் மாநாட்டிற்குப் பிறகுதான் அங்கு ஆற்றிய அரிய அழகான சொற்பொழிவு, அவரைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த நீதிக்கட்சியைச் சார்ந்த தலைவர்களுக்கும் - தொண்டர்களுக்கும் நன்கு அறிமுகப்படுத்திற்று என்று சொல்ல வேண்டும்.
பட்டுக்கோட்டையிலிருந்து துறையூர் மாநாட்டிற்குச் சென்று வந்த சிலர், அண்ணாவைப் பற்றியும், அவரது சொற்பொழிவின் அருமையைப் பற்றியும் வியந்து வியந்து பாராட்டிப் புகழக் கேட்டேன். மாநாட்டில் கலந்து கொண்டு வந்தவர்கள், மாநாட்டில் ஆற்றிய உரைகளில், சென்னையிலிருந்து வந்த தோழர் அண்ணாத்துரை என்ற இளைஞர் ஆற்றிய உரைதான் தலைசிறந்ததாக அமைந்திருந்தது- அவருக்கு வயது இருபத்தெட்டுதான் இருக்கும். எம்.ஏ.பட்டம் பெற்ற பட்டதாரியாம் அவர். குள்ளமான உருவம்; ஒல்லியான உடல், எளிமையான தோற்றம்; விரிந்த முகம், பரந்த நெற்றி; ஒளிர்ந்த கண்கள்; எடுப்பான மூக்கு; நறுக்கு மீசை; வலது பக்கம் வாகு எடுத்த தலைமுடி; ஓயாமல் வெற்றிலைப் பாக்கைக் குதப்பிக் கொண்டிருக்கும் வாய்; அவ்வப்போது சிட்டிகைப் பொடி போடும் பழக்கம்; அவர் பேச எழுந்து வந்தபோது யாரோ? எவரோ? என்று நினைத்தோம். தோற்றத்தில் கவர்ச்சியில்லை. ஆனால், அவர் பேசத் தொடங்கியவுடன், அவரிடம் காணப்பட்ட அவரது எடுப்பான குரல்; அடுக்குச் சொற்கள் அழகிய தமிழ் எதுகையும் மோனையும், உவமையும் உருவகமும், அணி அழகும் பொருளாழமும் கொண்ட சொல்லோட்டம்; ஓசை நயம்; அழுத்தமான கருத்துக்கள்; ஆணித்தரமான வாதங்கள்; உறுதியான கொள்கைகள்; உயர்ந்த எண்ணங்கள்; கேலியும் கிண்டலும் கலந்த கூற்றுக்கள்; நகைச்சுவை ததும்பும் எடுத்துக்காட்டுகள்; வீரம்-வியப்பு-தெளிவு-திட்பம்-நயம்பலன்-கலைச் சிறப்பு-கற்பனை வளம் போன்ற சுவைகள்; சுய மரியாதை உணர்வின் ஆக்கம்; பகுதிதறிவுக் கொள்கையின் இன்றியமையாச் சிறப்பு; நீதிக்கட்சிக் கொள்கையின் நியாயம்; அதன் போக்கிலே காணப்படும் நேர்மை; அது நிலை நாட்ட விரும்பும் உண்மை; பெரியாரின் தலைமையின் கீழ் ஒன்று திரள வேண்டிய பெரும்படையின் இன்றியமையாமை; பெரும் படை போராட வேண்டிய களங்களின் வகைகள்; பெற வேண்டிய வெற்றிகளின் தன்மைகள் ஆகியவை எங்களை அப்படி இப்படி நகரவொட்டாதபடியும், அங்கும் இங்கும் பார்க்க முடியாதபடியும், கண்-காது-கருத்து ஒன்றி, மெய் மறந்து, மனமகிழ்ந்து, மகிழ்ச்சி ஆரவாரக்கடலில் மூழ்கி வீட்டோம் என்றெல்லாம் அவர்கள் பல படப் பாராட்டிச் சொல்லியவைகள், என் மனதைப் பெரிதும் கவர்ந்தன. அவர்கள் அண்ணாவின் பேச்சு வன்மையைப் பற்றிப் பல நாட்கள் வரை வியந்து வியந்து சொல்லிக்கொண்டே இருந்தனர்; அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டெ இருந்தனர்.
1933 ஆம் ஆண்டு ஆனர்ஸ் தேர்வு எழுதினார் அவருடைய உற்ற நண்பருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் தேர்வு எழுத முடியவில்லை. அந்த உற்ற நண்பருக்காக தொடர்ந்து தேர்வு எழுதாமல் அண்ணா விலகிக்கொண்டார். அவர் எழுதி முடித்த இரண்டு தேர்வு தாள்களும் மிகச் சிறந்தது என்று பல்கலைக் கழகத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1935 ஆம் ஆண்டு அண்ணா ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தால். அண்ணா அவர்கள் சிறிது காலம் அன்றய ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களின் ஒருவராய் இருந்த பொப்பிலிராஜாவிடம் அவருடைய உதவியாளராக இருந்து, அவருடைய ஆங்கிலப் பேச்சை மொழிபெயர்த்து அவருடன் அன்றய சென்னை ராஜதானியில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார்.
1936 ஆம் ஆண்டு குமாரராசா முத்தையா செட்டியார் அவர்கள் அண்ணாவை தன்னிடம் உதவியாளராக வந்துவிடுங்கள் மாதம் ரூ. 120./ தருகிறேன் என வேண்டுகோள் விடுக்க அண்ணா அதற்கு நன்றி கூறி மறுத்துவிட்டார்.
1937 ஆம் ஆண்டு அண்ணா குடியரசில் துணை ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த போது, ஈரோடு வந்த ஜி.டி.நாயுடு, அண்ணாவை என்னிடம் உதவியாளராக வந்துவிடுங்கள் மாதம் ரூ. 250 -ம், காரும் பங்களாவும் தருகிறேன் என்றார். அதையும் அண்ணா மறுத்துவிட்டார்.
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் புரட்சி நாடெங்கும் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. அப்போது நம் தோழரகள் இந்தக் கிளர்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும் என்ற கருத்தை தந்தை பெரியாரிடம் தெரிவித்தார். ஆனால் தந்தை பெரியார் அதை மறுத்துவிட்டார்.
1942 ஆம் ஆண்டில் இந்தியாவில் வைஸ்ராயாக இருந்து ஆங்கிலேயர் அண்ணாவுக்கு அழைப்பு விடுத்தார். தனக்கும் தன் அரசாங்கத்திற்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்ய - பிரச்சார செயலாளராக நியமிக்கிறேன் - நல்ல சம்பளமும் தருகிறேன் என்று. அண்ணா அதற்கு நன்றி கூறி, அந்த அழைப்பை ஏற்க மறுத்தார்.
1944 ஆம் ஆண்டு பர்மாவில் அன்றய பிரதமர் யுநு அவருக்கு உதவியாளராகப் பணியாற்ற மாதம் ரூ. 2000 தருகிறேன், என்று அண்ணாவுக்கு அழைப்பு விடுத்தார். அண்ணா அதற்கும் நன்றி கூறிவிட்டு, அந்த பதவியை ஏற்க மறுத்தார்.
1937 ஆம் ஆண்டில், நான் பட்டுக்கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பில் பயின்றுகொண்டிருந்தபோதுதான், அறிஞர் அண்ணாவின் அருமை பெருமைகளை, முதன் முதலாகச் செவிவழி கேட்டு மகிழும் சீரிய வாய்ப்பினைப் பெற்றேன். 1937-ம் ஆண்டு, 1921 முதல் 1936 வரை சென்னை மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த நீதிக்கட்சியானது, தேர்தல் களத்திலே படுதோல்வியுற, காங்கிரசுக்கட்சி வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நேரம். தேர்தல் களத்தில் தோல்வியைத் தழுவிய நீதிக்கட்சியின் தலைவர்கள் பலர், கட்சியைவிட்டு உதுங்கிப் போய்விட்டனர். அந்த நேரத்தில், பகுத்தறிவுத் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், வீழ்ந்து பட்டுக்கிடந்த நீதிக் கட்சிக்கு எழுச்சியூட்டவும், அதன் கொள்கைகளையும், போட்பாடுகளையும் சீர்படுத்திச் செம்மைப்படுத்திச் செல்வாக்குப் பெறச் செய்யவும் முழு மூச்சோடு பாடுபடத் தொடங்கினார்கள். அதன் முதற்கட்டமாகச் சிதறுண்டு கிடந்த தொண்டர்களையெல்லாம் ஒன்று திரட்டி, ஓரணியில் கொண்டுவர, பெரியார் அவர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த துறையூரில், சிறப்பு மாநாடு ஒன்றினைக் கூட்டினார்கள். அந்து மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, அறிஞர் அண்ணாவுக்குப் பெரியார் அழைப்பு விடுத்தார்கள். பெரியாரின் அன்பு அழைப்பினை ஏற்று, அறிஞர் அண்ணா அவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு, சீரிய சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்கள். அத வரையில் அண்ணா அவர்க, சென்னையில் உள்ள இரு சிலருக்கு மட்டும் அறிமுகமானவராக விளங்கினார்கள். துறையூர் மாநாட்டிற்குப் பிறகுதான் அங்கு ஆற்றிய அரிய அழகான சொற்பொழிவு, அவரைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த நீதிக்கட்சியைச் சார்ந்த தலைவர்களுக்கும் - தொண்டர்களுக்கும் நன்கு அறிமுகப்படுத்திற்று என்று சொல்ல வேண்டும்.
பட்டுக்கோட்டையிலிருந்து துறையூர் மாநாட்டிற்குச் சென்று வந்த சிலர், அண்ணாவைப் பற்றியும், அவரது சொற்பொழிவின் அருமையைப் பற்றியும் வியந்து வியந்து பாராட்டிப் புகழக் கேட்டேன். மாநாட்டில் கலந்து கொண்டு வந்தவர்கள், மாநாட்டில் ஆற்றிய உரைகளில், சென்னையிலிருந்து வந்த தோழர் அண்ணாத்துரை என்ற இளைஞர் ஆற்றிய உரைதான் தலைசிறந்ததாக அமைந்திருந்தது- அவருக்கு வயது இருபத்தெட்டுதான் இருக்கும். எம்.ஏ.பட்டம் பெற்ற பட்டதாரியாம் அவர். குள்ளமான உருவம்; ஒல்லியான உடல், எளிமையான தோற்றம்; விரிந்த முகம், பரந்த நெற்றி; ஒளிர்ந்த கண்கள்; எடுப்பான மூக்கு; நறுக்கு மீசை; வலது பக்கம் வாகு எடுத்த தலைமுடி; ஓயாமல் வெற்றிலைப் பாக்கைக் குதப்பிக் கொண்டிருக்கும் வாய்; அவ்வப்போது சிட்டிகைப் பொடி போடும் பழக்கம்; அவர் பேச எழுந்து வந்தபோது யாரோ? எவரோ? என்று நினைத்தோம். தோற்றத்தில் கவர்ச்சியில்லை. ஆனால், அவர் பேசத் தொடங்கியவுடன், அவரிடம் காணப்பட்ட அவரது எடுப்பான குரல்; அடுக்குச் சொற்கள் அழகிய தமிழ் எதுகையும் மோனையும், உவமையும் உருவகமும், அணி அழகும் பொருளாழமும் கொண்ட சொல்லோட்டம்; ஓசை நயம்; அழுத்தமான கருத்துக்கள்; ஆணித்தரமான வாதங்கள்; உறுதியான கொள்கைகள்; உயர்ந்த எண்ணங்கள்; கேலியும் கிண்டலும் கலந்த கூற்றுக்கள்; நகைச்சுவை ததும்பும் எடுத்துக்காட்டுகள்; வீரம்-வியப்பு-தெளிவு-திட்பம்-நயம்பலன்-கலைச் சிறப்பு-கற்பனை வளம் போன்ற சுவைகள்; சுய மரியாதை உணர்வின் ஆக்கம்; பகுதிதறிவுக் கொள்கையின் இன்றியமையாச் சிறப்பு; நீதிக்கட்சிக் கொள்கையின் நியாயம்; அதன் போக்கிலே காணப்படும் நேர்மை; அது நிலை நாட்ட விரும்பும் உண்மை; பெரியாரின் தலைமையின் கீழ் ஒன்று திரள வேண்டிய பெரும்படையின் இன்றியமையாமை; பெரும் படை போராட வேண்டிய களங்களின் வகைகள்; பெற வேண்டிய வெற்றிகளின் தன்மைகள் ஆகியவை எங்களை அப்படி இப்படி நகரவொட்டாதபடியும், அங்கும் இங்கும் பார்க்க முடியாதபடியும், கண்-காது-கருத்து ஒன்றி, மெய் மறந்து, மனமகிழ்ந்து, மகிழ்ச்சி ஆரவாரக்கடலில் மூழ்கி வீட்டோம் என்றெல்லாம் அவர்கள் பல படப் பாராட்டிச் சொல்லியவைகள், என் மனதைப் பெரிதும் கவர்ந்தன. அவர்கள் அண்ணாவின் பேச்சு வன்மையைப் பற்றிப் பல நாட்கள் வரை வியந்து வியந்து சொல்லிக்கொண்டே இருந்தனர்; அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டெ இருந்தனர்.
நன்றி ஈகரை சிவா
No comments:
Post a Comment